திருப்பூர், பிப்.6- திருப்பூரில் குடிசை மாற்று வாரி யத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் பல மாதங்க ளாக கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக வும், பல முறை மனு அளித்தும் மாந கராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக் காமல் உள்ளதை கண்டித்தும் அப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். திருப்பூர் நொய்யல் வீதி, வளம் பாலம் சந்திப்பின் நொய்யல் கரை யோரம் செல்லாண்டியம்மன் துறை அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பகுதி யில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் இப்ப குதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதிக் குள் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றக் கோரி இப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக் காமல் உள்ளது. அரசியல் கட்சியின ரும் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்கின்றனர். பின்னர் தங் களை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பெண்கள் புகார் கூறினர். எனவே உடனடியாக தங்கள் பகுதி யில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஞாயிறன்று காலை செல்லாண்டியம்மன் துறை சாலையில் அமர்ந்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால் அப்பகு தியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருப் பூர் தெற்கு காவல்துறையினர் சம் பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைய டுத்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.