உதகை, ஜூலை 24- கூடலூர் அருகே வீடுகளை சேதப் படுத்தி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவாலா அருகே உள்ள வாழவயல் பகு தியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வரு கிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், வெள்ளியன்று அப்பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்து, இளையராஜா என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி ஆகியோரது வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தின.இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வனத்து றையை கண்டித்து சனியன்று போராட் டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தக வலறிந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பி னர் பொன்.ஜெயசீலன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப் பீடு தொகை வழங்கப்பட்டது. ஓவேலியிலும் வீடு சேதம் இதேபோல், கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட திருவள் ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வ நாதன். இவரது வீடு தனியாக உள்ள தால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப் பட்டது. இதன் காரணமாக அவர் இர வில் உறவினர்கள் வீட்டில் குடும்பத் தினருடன் தங்கி வந்தார். தனது வீட் டுக்கு சனியன்று காலை வந்தபோது வீட்டை காட்டுயானை உடைத்து சேதப் படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமானது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வீடுகளை காட்டு யானைகள் சேதப்ப டுத்தியதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.