districts

img

சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.10- விபத்து ஏற்படுவதற்குள் சேறும், சகதியுமாக மாறி யுள்ள மண்சாலையை சீர மைக்க வேண்டும் என மக் கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், வேப்பிலைப்பட்டி கிராமம், பெரியார் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  மண்சாலை உள்ளது. சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரி டம் முறையிட்டும் சாலை அமைக்கவில்லை. பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து  கடந்தாண்டு மழைக்காலத்தில் சாலை அமைக்கும் பணி நடை பெற்றது. இந்த பணி முழுமையடைவில்லை. மேலும், வேப்பி லைப்பட்டி பெரியார், அம்பேத்கர் சிலைக்கு அருகில் கழிவு நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சரியான  முறையில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப் படாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக் காலங்களில் மழைநீர் சாலையிலேயே தேங்கி நின்று தற் போது, மண்சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இவ்வழி யாக அனைத்து வாகனங்கள் மற்றும் குழந்தைகள், முதிய வர்கள் என அனைத்து தரப்பினரும் செல்கின்றனர். எனவே,  விபத்து ஏற்படுவதற்குள் மண் சாலையை சீரமைத்து, கழிவு நீர் கால்வாய்யை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.