districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பள்ளிகளில் மோடி அரசியல் செய்வதா?

அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரத மர் மோடி வருவதை ஒட்டி திருப்பூர் பள்ளிகளில் விதி முறைக்கு புறம்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிப்.27 ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டம். பல்லடம் மாதப்பூரில் பாஜக சார்பில் மாநாடு நடைபெறுவதை ஒட்டி, திருப்பூர் மாவட் டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் மோடியை வரவேற் போம் என்கிற பெயரிலும், அரசு விதிமுறைகளுக்கு எதி ராக பள்ளிகள் முன்பு கட்டாய நோட்டீஸ் வழங்குவது, மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியல் பிரச்சாரம், கல்வி நிலையத்திற்கு உள்ளேயே சென்று கூட்டம்  நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகி றார்கள். செட்டிபாளையம் தனியார் பள்ளி ஒன்றில்  நேரடியாக பள்ளி வளாகத்திற்குள் பிஜேபி மாவட்டத்  தலைவர் தலைமையில் “வெல்கம் மோடி” என்கிற  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில்  இப்படியான நிகழ்ச்சி நடைபெறுவதை மாவட்ட கல்வி  துறை அதிகாரிகள் கண்டும்காணாமல் இருப்பது  கண்டனத்துக்குரியது. பிரதமர்மோடி அரசின் சார்பில்  நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு வரவில்லை. மாறாக  அவர் ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து  கொள்வதற்காக வருகை தரும் நிலையில் அதனை  பயன்படுத்தி மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியல்  பிரச்சாரத்தை அந்த கட்சியினர் கல்வி நிலைய வளா கங்களில் செய்வதை ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்  கொண்டு இருக்க முடியாது.  எனவே திருப்பூர் மாவட்ட கல்வி துறை உடனடி யாக தலையிட்டு இப்படியான நிகழ்ச்சி நடத்தும் கல்வி  நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாகவும், தவறும்பட்சத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு வலு வான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல், பிப்.23- பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே  அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவ தால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பரமத்திவேலூ ருக்கு வரும் பிரிவு சாலை, வேலூரிலிருந்து கரூர் செல் லும் தேசிய நெடுஞ்சாலைச் சந்திப்பு அருகே கோழி, மீன் கழிவுகள் மற்றும் பழைய கட்டடக் கழிவுகளை கொட்டி  செல்கின்றனர். சில நேரங்களில் வேலூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இப்பகுதியில் கொட்டப் படுகின்றன. இந்த குப்பைக்கழிவுகளுக்கு தீ வைப்ப தால் கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக வும், பரமத்திவேலூரில் இருந்து கரூர் செல்வோரும், வருவோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக் குள்ளாகி வருவதோடு, விபத்து ஏற்படும் அபாய சூழ் நிலையும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை வேலூர் பேரூராட்சியினருக்கு தக வல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சட்டியுள் ளனர். எனவே, விபத்தினைத் தடுக்கவும், சுகாதாரச் சீர் கேட்டைத் தடுக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுவோர் மீதும், குப்பைக்கழிவுக ளுக்கு தீ வைப்போர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.23- பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு பள்ளிக்கு அருகே உள்ள மதுபானக் கடையை விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா விற்குபட்ட வெங்கடசமுத்திரம் கிராமத்தில், பிரதான  சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. வெங்கட சமுத்திரம் மோளையானூர், பூனையானூர் ஆகிய பகு திகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வெங் கடசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். பூனையானூர், மோளையானூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள், தினமும் இவ்வழி யாக அரசு மதுபானடக் கடையை கடந்து செல்ல வேண் டிய சூழ்நிலை உள்ளது. வெங்கடாசமுத்திரம் அரசு  மதுபானக் கடையின் வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை, மது அருந்திவிட்டு சிலர் கேலி செய்து வருவதாகவும், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு  இது இடையூறாக உள்ளதாகவும் பெற்றோர்கள் புகார்  தெரிவித்துள்ளனர். எனவே, தருமபுரி மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு வெகு அரு காமையில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற  வேண்டும் என பள்ளி மாணவிகளும், பெற்றோர்க ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் நடமாட்டம் அச்சத்தில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள்!

சேலம், பிப்.23- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் தெருநாய்கள் நடமாட்டம் அதிக ரித்து வருவதால், நோயாளிகள் மற்றும் மருத் துவப் பணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாநக ரத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. சேலம் மட்டுமில்லாமல் அருகே உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக் கல், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்க ளில் இருந்து நாள்தோறும் எண்ணற்ற நோயா ளிகள், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல் கின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம னையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நி லையில், மருத்துவமனை வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரி கின்றன. மேலும், பல இடங்களில் நாய்கள்  மருத்துவமனைக்கு உள்ளேயே புகுந்து நோயாளிகளை பார்த்து குரைத்து வருவ தால் நோயாளிகளும், மருத்துவப் பணியா ளர்களும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவு இருக்கும் பிரதான கண்ணாடி மாளிகை பகுதி யில் அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி  வருகின்றன. இந்த வழியை கடந்து தான் அருகில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவப்பிரிவிற்கு செல்ல வேண்டியுள்ளதால் தெருநாயை பார்த்து நோயாளிகள் ஓடி ஒளியும் சூழல் நிலவி வரு கிறது. மருத்துவமனை வளாகத்தில் எலிகள்  உள்ளிட்ட உயிரினங்களில் தொடர் பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது வெறி நாய்கள் மற்றும் தெருநாய்களின் எண் ணிக்கை மருத்துவமனை வளாகத்திற்கு உள் ளும், வெளியேயும் அதிகரித்துள்ளது. எனவே,  அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே மருத்து வமனை நிர்வாகத்தினர் தெருநாய்களைப் பிடித்து மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து துரித நடவடிக்கை: அசம்பாவிதம் தவிர்ப்பு

டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து துரித நடவடிக்கை: அசம்பாவிதம் தவிர்ப்பு சேலம், பிப்.23- ஆத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்த தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அம்பேத்கர் நகர் அருகே உள்ள தெற்கு காடு பகுதி சாலையில் 200 கே.வி. கொண்ட டிரான்ஸ்பார்மர் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் தெற்கு  காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், இந்த டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி யில் இருக்கும் மின்பெட்டியில் திடீரென புகை வெளியேறு வதை கண்டு அவ்வழியை சென்ற பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததால், மின்வாரிய அலுவலர்கள் விரைந்து வந்து மின் விநியோகத்தை நிறுத்தினர். தொடர்ந்து தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீச்சி யடித்து தீ பரவாமல் இருக்க தடுத்தனர். இதனால் பெரும்  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொழிற்கடன் உதவி வழங்கல்

தருமபுரி, பிப்.23- தருமபுரி மாவட்டத்தில் 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் வழங்கப்பட் டது. தருமபுரி மாவட்ட ஆட் சியர் அலுவலக கூடுதல் கூட் டரங்கில் சிறு, குறு மற்றும்  நடுத்தரத் தொழில்களுக் கான மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார் தலைமையில் வெள் ளியன்று நடைபெற்றது. இம் முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 39 பய னாளிகளுக்கு ரூ.9.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் மற்றும் ஒப் பளிப்பு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார் வழங்கினார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 1018 பயனாளிகள் ரூ.58.77 கோடி தொழிற்கடன் வழங்கப்பட் டுள்ளது, என்றார். இதைத் தொடர்ந்து இம்முகா மில் சுயதொழில் கடன் திட் டங்கள் மாநில அரசின் மானி யங்கள் (25 சதவிகித மூலதன மானியம் மற்றும் இதர மானி யங்கள்) புதிய தொழில்  முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரி வாக எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட  தொழில் மைய பொது மேலா ளர் பா.கார்த்திகைவாசன், தாட்கோ மாவட்ட மேலாளர் எட்வர்ட் ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கூடங்களில் மோடி அரசியல் செய்வதா? பாஜகவுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

திருப்பூர், பிப்.23- அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து  கொள்ள பிரதமர் மோடி வருவதை ஒட்டி  திருப்பூர் பள்ளிகளில் விதிமுறைக்கு புறம்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் க.சு கல்கி ராஜ், மாவட்டச் செயலாளர் சா.பிரவீன்  குமார் ஆகியோர் வெள்ளியன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: எதிர்வரும் 27ஆம் தேதி அன்று திருப் பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில்  பாஜக சார்பில் மாநாடு நடைபெறுவதை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி வளாகங்களில் மோடியை வர வேற்போம் என்கிற பெயரிலும், அரசு  விதிமுறைகளுக்கு எதிராக பள்ளிகள்  முன்பு கட்டாய நோட்டீஸ் வழங்கு வது, மாணவர்கள் மத்தியில் வெறுப்பு  அரசியல் பிரச்சாரம், கல்வி நிலையத் திற்கு உள்ளேயே சென்று கூட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகி றார்கள். செட்டிபாளையம் தனியார் பள்ளி ஒன்றில் நேரடியாக பள்ளி  வளாகத்திற்குள் பாஜக மாவட்ட தலை வர் தலைமையில் “வெல்கம் மோடி” என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் இப்படியான நிகழ்ச்சி நடைபெறுவதை மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் கண்டும்  காணாமல் இருப்பது கண்டனத்துக்குரி யது. பிரதமர் மோடி அரசின் சார்பில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு வர வில்லை. மாறாக அவர் ஒரு அரசியல்  கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக வருகை தரும் நிலையில் அதனை பயன்படுத்தி மாணவர்கள் மத் தியில் வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை  அந்த கட்சியினர் கல்வி நிலைய வளா கங்களில் செய்வதை ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க  முடியாது. எனவே திருப்பூர் மாவட்ட கல்வி துறை உடனடியாக தலையிட்டு இப்படியான நிகழ்ச்சி நடத்தும் கல்வி நிறுவனத்தின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென இந்திய  மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாகவும், தவறும்பட்சத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவல கத்தை முற்றுகையிட்டு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி யிருக்கும் என்றும் அவர்கள் கூறியிருக் கின்றனர்.

தன்னிச்சையாக செயல்படும் மாவட்ட ஊராட்சி செயலர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் வெளிநடப்பு

திருப்பூர், பிப். 23 - திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு  நிர்வாகத்தில் தலைவராகிய தனது அனுமதி இல்லாமல் மாவட்ட ஊராட்சிக் குழு செயலர் அரசு நிதியை பயன்படுத்துவதை கண் டித்து மாவட்ட ஊராட்சிக்குழு  தலை வர் வெளிநடப்பு செய்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா தலைமை ஏற் றார். மாவட்ட ஊராட்சி ச்செயலாளர் முரளி கண்ணன் முன்னிலை வகித் தார்.  இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட  ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா, மாவட்ட ஊராட்சிச் செயலாளர் தன் னிச்சையாக செயல்படுவதாக குற் றம் சாட்டினார். அரசு மாவட்ட ஊராட்சி பகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கும்  நிதியை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாகவும், அலுவலக பயன்பாட்டுக்கு என பொருட்கள் வாங்குவதில் தனது அனுமதி இன்றி  செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி னார். மாவட்ட கூட்ட அரங்கில் பேசிக்  கொண்டிருக்கும் போது இது தொடர் பாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  சத்யபாமாவுக்கும், மாவட்ட ஊராட்சி  செயலாளர் முரளி கண்ணனுக்கு விவாதம் ஏற்பட்டது.  அப்போது மாவட்ட ஊராட்சி குழு  செயலாளர் முரளி கண்ணன் தனது  அறையில் தினமும் படுத்து உறங்கு வதாகவும், அங்கேயே பாய், தலை யணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பது கண் டிக்கத்தக்கது எனவும் சத்தியபாமா பேசினார். ஆனால் மாவட்ட ஊராட்சி செய லர் முரளி கண்ணன் பதிலுக்கு பதில்  பேசிக்கொண்டே இருந்தார். இதைத்  தொடர்ந்து ஆவேசமான விவா தத்திற்கு பிறகு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய் வதாக கூறி கோபத்துடன் வெளியே றினார்.  அங்கிருந்து சென்ற அவர் தனது  அறையில் மாவட்ட ஊராட்சி செயலா ளர் முரளிக்கண்ணன் தூங்குவ தற்காக வைத்திருந்த பாய், தலை யணை, சோப்பு, சீப்பு உள்ளிட்ட பொருட்களை அனைவரிடமும் காட்டி கேள்வி எழுப்பினார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான மாவட்ட ஊராட்சி குழு தலைவரை, அரசு அலுவல ரான ஊராட்சி செயலாளர் மதிக்கா மல் தன்னிச்சையாக செயல்படுவது  கண்டிக்கத்தக்கது என்று மக்கள் பிர திநிதிகள் கூறினர்.  இதையடுத்து மாவட்டக் கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்தியபாமாவின் அறைக்கு உள்ளே சென்று மாவட்ட  ஊராட்சி தலைவரிடம் சமாதானம் செய்தனர்.

சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தக் கோரிக்கை

சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்தக் கோரிக்கை அவிநாசி,பிப்.23- தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் பேரூராட்சி அலு வலகம் மற்றும் காவல் நிலையத்தில் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, குன்னத்தூர் வாரச்சந்தை திங்கட்கிழமை  மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்பொழுது சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக இயங்கி வருகி றது. சாலையோர வியாபாரிகள் பெருகி வருகின்றனர். இதனால் கடை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். சாலை யோர வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து  கொடுக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை மட்டும் சந்தை  வியாபாரம் நடைபெறும் வகையில் முறைப்படுத்த வேண்டும்  எனக் கூறப்பட்டுள்ளது.

பூச்சித் தாக்குதலால் மக்காச்சோளம் விளைச்சல் கடும் பாதிப்பு குவின்டாலுக்கு ரூ.3500 விலை நிர்ணயிக்க கோரிக்கை

திருப்பூர், பிப். 23 - திருப்பூர் மாவட்டத்தில் பருவ மழை  குறைவு மற்றும் பூச்சி தாக்குதல் காரண மாக மக்காச்சோளம் விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் மக் காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்துள் ளதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய குவின்டாலுக்கு ரூ.  3500 கொள்முதல் விலை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  திருப்பூர் மாவட்ட குழு கூட்டம் வெள்ளி யன்று பல்லடம் விவசாய சங்க அலுவல கத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவ ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லிபாபு கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் வேலை அறிக்கை முன் மொழிந்தார். மாவட்டப் பொருளாளர் அ.பலதண்டபாணி, மாவட்ட நிர்வாகி கள் எஸ்.பரமசிவம், எஸ்.கே.கொளந்த சாமி உள்ளிட்டு மாவட்ட குழு உறுப்பி னர்கள்  கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  நடப்பாண்டில் வட கிழக்கு பருவமழையும் போதிய அள வில்லாத நிலையில்,  பிஏபி பாசன நீரும்  முழுமையாக கிடைக்காமல் மக்காச் சோளம் பயிரிட்டுள்ள நிலங்களில் கடு மையான படைப்புழு தாக்குதல் மற்றும்  வறட்சி காரணமாக விளைச்சல் கடு மையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த  சூழ்நிலையில் கடந்த நான்கு மாதத் திற்கு முன்பு குவிண்டால் ஒன்றுக்கு  ₹.2700-க்கு விற்ற மக்காச்சோளம்  தற் போது ₹.2100-அளவுக்கு விலை குறைந்து விவசாயிகளிடம் கொள்மு தல் செய்யப்படுகிறது. இன்றைக்கு முட் டுவழிச் செலவு கூடுதல், மருந்து செலவு,  அறுவடை செலவு இவைகளினால் கட் டுப்படியான விலை கிடைக்காமல் விவ சாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகி றார்கள். எனவே தமிழக அரசு மக்காச் சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ₹.3500- விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் குழுவில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை துவக்குக! திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி உள் ளிட்டு ஈரோடு, கோவை மாவட்டங் களில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள  விவசாய நிலங்கள், கிணறுகள் பயன் பெறும் வகையில் அவினாசி-அத்திக் கடவு திட்டம் கடந்த ஆட்சியில் பணிகள்  துவங்கப்பட்டு பணிகள் முடிவடைந்து,  பெரும்பாலான  குளங்களுக்கும், குட் டைகளுக்கும் சோதனை ஓட்டத்தில் நீர்  நிரப்பி பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆயி னும் இந்த திட்டத்தை துவக்கி வைக்க  தாமதம் ஆவது குறித்து பொதுமக்க ளுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  இந்த பகுதி வறட்சிக்கு இலக்காகும் பகுதி என்பதை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடன டியாக துவக்கி குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிக்கூடங்களில் மோடி அரசியல் செய்வதா?

அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருவதை ஒட்டி திருப்பூர் பள்ளிகளில் விதிமுறைக்கு புறம் பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இது குறித்து இந்திய மாவட்ட சங்கம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: எதிர்வரும் 27ஆம் தேதி அன்று திருப்பூர்  மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் பாஜக சார்பில் மாநாடு நடைபெறுவதை ஒட்டி,  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளா கங்களில் மோடியை வரவேற்போம் என்கிற பெயரிலும், அரசு விதிமுறைகளுக்கு எதிராக  பள்ளிகள் முன்பு கட்டாய நோட்டீஸ் வழங்கு வது, மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசி யல் பிரச்சாரம், கல்வி நிலையத்திற்கு உள் ளேயே சென்று கூட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். செட்டி பாளையம் தனியார் பள்ளி ஒன்றில் நேரடி யாக பள்ளி வளாகத்திற்குள் பாஜக மாவட் டத் தலைவர் தலைமையில் “வெல்கம் மோடி” என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் இப்படியான நிகழ்ச்சி நடைபெறுவதை மாவட்ட கல்வி துறை அதி காரிகள் கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி அர சின் சார்பில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு  வரவில்லை. மாறாக அவர் ஒரு அரசியல்  கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக வருகை தரும் நிலையில் அதனை பயன் படுத்தி மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அர சியல் பிரச்சாரத்தை அந்த கட்சியினர் கல்வி  நிலைய வளாகங்களில் செய்வதை ஒருபோ தும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க  முடியாது. எனவே திருப்பூர் மாவட்ட கல்வி  துறை உடனடியாக தலையிட்டு இப்படி யான நிகழ்ச்சி நடத்தும் கல்வி நிறுவனத் தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாகவும், தவறும் பட்சத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தை முற்றுகையிட்டு வலுவான போராட் டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கோவை, பிப்.23- கோவை மாவட்டம், அன்னூர் அடுத் துள்ள கரியாம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கிருந்து அன்னூர் நகரம், கெம்பநாயக் கன்பாளையம், நல்லிசெட்டிபாளையம், பொகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழனன்று இரவு துணை மின் நிலையத்திலிருந்த மின் மாற்றி ஒன்றில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் மின் மாற்றி தாங்காமல் உடனடியாக வெடித்து  சிதறியது. மின்மாற்றியில் இருந்த ஆயி லால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக  தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த  மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சா ரத்தை துண்டித்தனர். மேலும், விரைந்து வந்த அன்னூர் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். எனினும்,மின்மாற்றி முழுவதுமாக எரிந்து தீயில் சேதமானது. நல்வாய்ப்பாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அரு கில் இருந்த மற்ற மின்மாற்றிகளுக்கும் தீ பர வாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.

கைப்பந்து போட்டி: கற்பகம் அணி வெற்றி

கைப்பந்து போட்டி: கற்பகம் அணி வெற்றி கோவை, பிப்.23- மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாநில அளவில் நடை பெற்ற கைப்பந்து போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக் கழக அணி வெற்றி பெற்றது. முத்தையா அம்பலம் நினைவாக இந்தப் போட்டிகள் கடந்த புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற் றன. இதில், சென்னை, கோயம்புத்தூர், சிவகாசி, சிவகங்கை,  திருச்சி, காரைக்குடி, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டி முடிவில் கோவை  டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி, கோவை கற்ப கம் பல்கலைக் கழகம், சத்யபாமா பல்கலைக் கழகம், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.  இறுதிப் போட்டியில் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி அணியை கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி  3க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, முத்தையா  அம்பலம் நினைவு கோப்பையைக் கைப்பற்றியது. என்.ஜி.பி கலை, அறிவியல் கல்லூரி அணி இரண்டாம்  இடத்தையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி  மூன்றாம் இடத்தையும், சத்யபாமா பல்கலைக்கழக அணி  நான்காம் இடத்தையும் பிடித்தன. இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தந்தை மறைந்த நிலையிலும்…  அரசு நிகழ்ச்சியில் பங்கெடுத்த அமைச்சர்

தந்தை மறைந்த நிலையிலும்…  அரசு நிகழ்ச்சியில் பங்கெடுத்த அமைச்சர் ஈரோடு, பிப்.23- கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தந்தை மறைந்த செய்தி அறிந்த பின்னும்  நிகழ்வின் முக்கியத்துவம் கருதி நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றி யம், கணுவாய் - அம்மன் காட்டேஜ், பசுவபட்டி அருகில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலைஞர் மக்கள் சேவை  முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 646 பயனாளிகளுக்கு ரூ.16.50 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முருங்கத்தொழுவு ஊராட்சியில் ரூ.28.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஒட்டன்குட்டையில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் என ரூ.1.07 கோடி மதிப் பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத் தார். தொடர்ந்து, மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிட மிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக, அமைச்சரின் தந்தையார் முத்தூர் சா. பெருமாள்கவுண்டர் (94) வெள்ளியன்று காலை 7.50 மணியளவில் காலமானார் என்ற நிலையிலும், அமைச் சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நிபுணர் குழு

கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நிபுணர் குழு உதகை, பிப்.23- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடை பெற்ற பங்களாவில் நிபுணர் குழு அமைத்து கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் என நீதிபதி உத்தர விட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர் பாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீதிமன்றம் தலைமையில் நேரில் சென்று  ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என எதிர்தரப்பு வழக் கறிஞர் விஜயன் தலைமையில், கடந்த 9ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர். குற்றம்சாட்டபட்டவர்கள் தரப் பில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகி னர். அப்போது, கொடநாடு பங்களாவை நீதிமன்றத் தின் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் வாதிட் டார். மேலும், சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி அப்துல் காதர், நிபுணர் குழு அமைத்து கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் எனவும், அதனை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்  எனவும், சாட்சியங்களை அழிக்கக் கூடாது எனவும் உத் தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

யானைகள் முகாம் பாகன் கொலை

சென்னை, பிப்.23- கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியிலுள்ள  கோழிக்கமுத்தி செட்டில்மெண்ட் பகுதியில் வசித்து வந் தவர் ராஜ்குமார். மனைவி மஞ்சு (39). இவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனைமலை  யானைகள் முகாமில் 16 ஆண்டுகள் தற்காலிகமாக வும், அதன்பிறகு, 5 வருடம் நிரந்தரமாகவும் 21 வருடம்  யானை பாகனாகவும் ராஜ்குமார் பணிபுரிந்து வந் தார். கடந்த ஆண்டு டிசம்பர் 2 அன்று, அவருடன் வேலை பார்க்கும் யானை பாகன் சந்திரன் என்பவர் வனத் துறை அலுவலர் வரச் சொன்னதாக ராஜ்குமாரை  அழைத்து சென்றார். பின்னர் 2 நாட்களாகியும் அவர்  வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்ததக வலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ராஜ்குமாரின் மனைவி மஞ்சு காவல்துறையில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, மாயதுரை என்ற இடத்தில்  ராஜ்குமார் இருப்பதாக டிசம்பர் 5 அன்று வனத்துறை  அலுவலர் தகவல் கொடுத்தார். இதையடுத்து, காவல் துறையினருடன் மஞ்சு மாயதுரைக்கு சென்றார். அங்கு அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது கணவர் ராஜ்குமார் தான் என்பதை உறுதி செய்துள்ளார். உடனே மர்மமான இறப்பு குறித்து சந்திரன் மற் றும் டாப்சிலிப் பகுதியை சேர்ந்த சிலரிடம் காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை குற்ற வாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்ச ரின் தனிப்பிரிவில் பிப்.22 அன்று மஞ்சு, தனது கணவர் மர ணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டு பிடித்து கைதுசெய்யக்கோரி மனு அளித்தார். அதில்,  தனது கணவரை விஜயன், அருண், வெங்கடேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளதாக வும்  இதை, சந்திரன் காவல்துறையினரிடம் வாய்மொழி யாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலமைச்சர் தலையிட்டு  தங்களது குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் குற்றவாளி களை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

மின்வாரிய பணியாளர்கள் போராட்ட ஆயத்தம்

ஈரோடு, பிப்.23- ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு, தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பில் போராட்டத்துக் கான ஆயத்தக்கூட்டம் நடந்தது. தமிழக மின்வாரியத்தின் கடன் 1.60 லட்சம்  கோடி ரூபாயாக உள்ளது. இதனைக் கணக்கில் கொண்டு பணியாளர்களின் ஊதி யம், ஓய்வூதியம், ஓய்வு காலப்பலன் குறித்து தெளிவான திட்டவரைவு வழங்க வேண்டும். பணியாளர்களின் பணப்பயன்கள், ஓய்வூ திய பலன்களை கம்பெனி அமலாக்க மறுத் தது. இதனால், மற்ற மாநிலங்களைப் போல் தமி ழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மின்வாரி யத்தில் பிரிக்கப்பட்ட கம்பெனிகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டால், பணியாளர்களின் பணச்சலுகைகள், ஓய்வூதியத்தில் கை வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தைப்போல, மின்வாரியத்தை மேலும் பல கம்பெனிகளாக பிரிக்க மாட் டோம் என தமிழக அரசு உறுதியளிக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆயத்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சி.ஜோதி மணி தலைமை வகித்து பேசினார். கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி, செயலாளர் பி.ஸ்ரீதேவி, ஓய்வூதியர் நல அமைப்பு செய லர் மூர்த்தி, குழந்தைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வைரத்தேர் மா.சின்னதுரை எம்எல்ஏ

வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வைரத்தேர் மா.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை : அமைச்சர் ஏற்பு சென்னை, பிப்.23- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், அம்புக்கோவில் வீரமாகாளி யம்மன் கோவிலுக்கு வைரத்தேர் மற்றும் மரத் தேர்வு வழங்க வேண்டியதன் அவ சியம் குறித்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ மா.சின்னதுரை கடிதம் எழுதினார். இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், புதுக்கோட்டை கறம்பக்குடி வட்டம், அம்புக்கோவில் வீரமாகாளியம்மன் கோவில் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். தற்போது பங்குனிதிருவிழாவின்போது கட்டுத் தேரில் அம்மாற் புறப்பாடு நடை பெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வைரத்தேர் மற்றும் மரத்தேர் செய்வதற்கு மதிப்பீடுகள் தயார் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் 23 உள்ளாட்சி வார்டு தேர்தல்: கூடுதல் இடங்களை பெற்று எல்டிஎப் வெற்றி

திருவனந்தபுரம், பிப். 23 - கேரளம் மாநிலத்தில் 23  உள்ளாட்சி வார்டுகளுக்கு நடை பெற்ற இடைத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கி ரஸ், பாஜக வசமிருந்த வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. 23 உள்ளாட்சி வார்டுகளில், கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஐந்து இடங்களில் மட்டுமே எல்டி எப் வெற்றி பெற்றிருந்தது. தற்போது  10 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. 13 இடங்களை ஏற்கெனவே பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களை இழந்தது. அதன் பலம் 10-ஆகக் குறைந்துள்ளது. நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக ஒரு இடத்தை இழந்து மூன்று இடங்களையே தக்க வைத்துள்ளது. நெடும்பாசேரி பஞ்சாயத்து (எர்ணாகுளம்) கல்பாகா நகர், முல்லச் சேரி பஞ்சாயத்து (திருச்சூர்) பாதி யார்குளங்கரா மற்றும் முசு பிலாங்காடு பஞ்சாயத்து (கண் ணூர்) மம்மக்குன்னு ஆகிய இடங்களை காங்கிரஸ் கூட்டணியிட மிருந்து எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. எருத்தன்பதி பஞ்சாயத்திற்குட்பட்ட (பாலக்காடு), பிடாரிமேடு வார்டில் எல்டிஎப் ஆதரவு சுயேச்சை மார்ட்டின் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார். வெளியநாடு பஞ்சாயத்து (ஆலப்பாக்கம்) உள்ள கிடாங்கரா பஜார் தெற்கில் போட்டியிட்ட எல்டிஎப் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி யடைந்தார். திருவனந்தபுரம் மாநகராட்சி வெள்ளார் வார்டில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பாணத்துரா பி.பைஜு 151 வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜகவை தோற்கடித் தார். இங்கு ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. மொத்தமுள்ள 23 வார்டுகளில் சிபிஎம் - 7, சிபிஐ - 2, ஆதரவு சுயேட்சை - 1 என எல்டிப் 9 இடங்களி லும், எல்டிஎப் ஆதரவு சுயேட்சை ஒரு இடத்திலும், காங்கிரஸ் - 4,  ஐயுஎம்எல் - 6 என யுடிஎப் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக மூன்று இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன.

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல் தருமபுரி, பிப்.23- ஜக்கசமுத்திரம் கிராமத்தில் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி சரிசெய்ய வேண் டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்டது ஜக்கசமுத்திரம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. 5 ரூபாய் செலுத்தி 20 லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் பிடித்துச் செல்லும் வகையில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இயந்திரம் பல நாட்க ளாக பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி  வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு  தகவலளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே,  பொதுமக்களுக்கு குறைந்த செலவில் குடிநீர் வழங்க ஏது வாக இந்த இயந்திரத்தை பழுதுநீக்கி, மீண்டும் மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:  9 பேர் நேரில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:  9 பேர் நேரில் ஆஜர் கோவை, பிப்.23- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் வெள்ளியன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 8 பெண் கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு பின்பு  வெள்ளியன்று 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப் பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் கூடுதல் ஆவணங்க ளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக் கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு ஒன்பது பேரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வெள்ளியன்று 9 பேரும், கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், பாலியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல் போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலை யில் ஒளிபரப்பு செய்து விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.  பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த பாலியல் கொடூர சம்ப வம் தொடர்பான வழக்கை, கடந்த அதிமுக அரசு மூடி மறைக்க  பார்த்தது. ஆனால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  உள்ளிட்ட அமைப்புகள் கடும் போராட்டத்தை முன்னெடுத்த னர். இதனைத்தொடர்ந்தே வழக்கு வேகமெடுத்தது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், வழக்கமாக வீடியோ கான்பிரன்சில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி வந்த நிலையில், வெள் ளியன்று அனைவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.