தருமபுரி, ஜன.11- தருமபுரி அருகே குண் டும், குழியுமான சிமெண்ட் சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட் சிக்குட்பட்டது கருவூல காலனி. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கருவூல காலனிக்கு செல்லும் சிமெண்ட் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்டது. தற்போது குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்நிலை யில், சில ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலையின் நடுவே குடிநீர் குழாய் அமைக்க ப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாமல்உள்ளது. மேலும், சாலையை ஒட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் சுவர் பெயர்ந்துள்ளது. இப்பகுதி யில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கார் செல்லும் போது எதிர்வரும் இருசக்கர வாக னங்கள் ஒதுங்கி செல்ல முடியவில்லை. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் கழிவு நீர் கால்வாய்க்குள் இறங்கி விபத்துக்குள்ள கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் குற்றச் செயல்களுக்கு வழி வகுக்கும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, மேற்கண்ட பிரச்சனைக் தொடர்பாக என ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.