நாமக்கல். ஏப்.18- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ராஜகணபதி தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 100 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். ராஜ கணபதி தெரு வடக்கு பகுதியில் சுமார் மூன்றை ஏக்கர் அளவில் ரியல் எஸ்டேட் பிளாட்டுகள் அமைக்க குமரேசன் சாந்தி என்பவர், ரியல் எஸ்டேட்டுக்காக நிலம் வாங்கும் போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சொந்தமான பட்டா இடத்தில் பொதுப் பாதை உள்ளது என காண்பித்துள்ளார். மேலும், எவ்வித ஆதாரமும் இல்லாமல், உண்மைக்கு புறம்பாக திருச்செங்கோடு பத்திரப்பதிவு அலுவலர் முத்துசாமி ஆதர வோடு கிரையம் செய்து, பாகப்பிரிவினை செய்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடு மற்றும் சுற்றுசுவர் உட்பட ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமரேசன் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டம் செய்துள்ளனர். இதுகுறித்து, மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து முறையிட்டனர். இதில், தவறாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு துணையாக இருந்த சார்பதிவாளர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமை யாளர் குமரேசன் சாந்தி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதில், ஜீவானந்தம் தலை மையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான வந்திருந்தனர்.