districts

img

வீட்டு மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கல்

நாமக்கல், ஜூன் 25- 10 குடும்பங்களுக்கு வீட்டு மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கும் நிகழ்ச்சி திருங் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு - ஈரோடு சாலையில் அமைந் துள்ள தெப்பக்குளம் பகுதியைச் சுற்றி, 15க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுக ளுக்கு முன்பு நீர்வழி புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப் போது, தாங்கள் நீண்ட காலமாக இங்கு வசித்து வருவதாக பொது மக்கள் கூறியதையடுத்து, 10 குடும் பங்களை சேர்ந்தவர்களுக்கு சீதா ராம்பாளையம் கிராமம், செங்கோடம் பாளையம் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கி தரப்பட்டது. அதற்கான பட்டா கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப் படாமல் இருந்தது. இதனால் அப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதை யும் பெற முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரி டம், தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத் திற்கான பட்டா வழங்க வேண்டும். மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா எடுத்த  நடவடிக்கையின் பேரில் 10 குடும் பங்களுக்கு இன்னும் ஒரு வார  காலத்திற்குள் வீட்டுமனை பட்டா  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட் டது. இந்நிலையில், முதற்கட்டமாக மின் இணைப்பு பெற தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டது. இதற் கான நிகழ்ச்சி திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு, 10 குடும்பத்தின ருக்கும் மின் இணைப்பு பெற, திருச் செங்கோடு வட்டாட்சியர் கொடுத்த தடையில்லா சான்றுகளை வழங்கி னார். அப்போது திருச்செங்கோடு வட்டாட்சியர் பச்சமுத்து, மண்டல  துணை வட்டாட்சியர் சவுண்டேஸ் வரி, வருவாய் ஆய்வாளர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரபு உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் உடனிருந்தனர்.