districts

img

வாலிபர் சங்க போராட்டதால் மின் இணைப்பு வழங்கல்

நாமக்கல், மே 2- நாமக்கல் அருகே மின் இணைப்பு வழங்க மறுத்த மின் வாரிய நிர்வாகத்தை கண்டித்து வரகூர் மின்சார வாரிய உதவி  செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி அருகே வரகூரில் மின்சார  வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவ லகத்தில், வரதராஜபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட கஸ்தூரிப்பட்டி கிழக்கு வீதியைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர் மின் இணைப்பு கேட்டு,  கட்டணம் செலுத்தி விண் ணப்பித்துள்ளார். ஆனால் , வரகூர்  உதவி செயற்பொறியாளர் அலுவ லகத்தில், பொருத்தமற்ற காரணங் களை கூறி மின் இணைப்பு வழங்க  மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மணிகண்டன் வசிக் கும் வீட்டிற்கு மின் இணைப்பு தரக் கூடாது என ஒரு சிலர் ஆட்சேபணை  தெரிவித்ததாக மின்வாரிய ஊழியர் கள் கூறி காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், மணிகண்டனின் குடும் பத்தினர் அவதிக்குள்ளாகி வந்த னர்.  இந்நிலையில், மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு  வழங்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு எருமப்பட்டி ஒன்றியத்  தலைவர் வி.பிரபு தலைமை ஏற் றார். வாலிபர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் எம்.மணி கண்டன், மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சிவச்சந்திரன், திருச்சி புற நகர் மாவட்ட செயலாளர் சி.பால குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

 முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், அனைத்து ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்டு, விண்ணப்பித்திருந்த நிலையில், கையூட்டு பெற வேண்டும் என்கிற ஒரே நோககத்திற்காகவே மின் இனைப்பு வழங்காமல், இழுத்தடிப்பதாக தெரிகிறது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.  மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் சங்கத்தினர் ஏராமனோர் மின்வாரியத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதனால், மின்வாரிய அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பலரும் மின்வாரியத்தின் நடவடிக்கையை விமர்சித்து சென்றனர். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையை தொடர்ந்து மணி கண்டன் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த போராட்டதால் வரகூர்  மின்வாரிய உதவி செயற்பொறி யாளர் அலுவலகம் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.