districts

img

அரசுப்பள்ளியில் பயின்று மருத்துவப்படிப்பிற்கு சென்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கல்

இளம்பிள்ளை, மார்ச் 16- சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றி யத்துக்குட்பட்ட இளம்பிள்ளை அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவிகள், கௌரி (சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவமனை), ராஜஸ்ரீ ஜோதி (தரும புரி அரசு மருத்துவமனை) ஆகியோர் மருத் துவப்படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பிடிஏ கழகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் தலா ரூ. 10  ஆயிரம்  ஊக்கத்தொகையினை இளம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ கழக தலைவர் நிர்மலா செல்வம்  வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, உதவி தலைமை ஆசிரி யர் ஜேக் முகமது இஸ்மாயில், பிடிஏ துணை  தலைவர் சுகன்யா அருண், பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாண விகள் பலர் கலந்து கண்டனர்.