தருமபுரி, டிச.14- போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு பஞ்சப்படி உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்ற வலியு றுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் மறியல் ஆயத்த கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநில இணை செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் அன்பழகன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சி.முனுசாமி ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர். 2022 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் ஓய்வுபெற்றோருக்கு பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டுமென்று 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத போக்கு வரத்து செயலாளர், பென்சன் பொறுப்பாட்சியர் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் அரசும், அதிகாரி களும் தீர்ப்பு வந்த 5 மணி நேரத்திற் குள் தடை உத்தரவு பெற்றனர். 86 ஆயிரம் ஓய்வுபெற்றோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், மேல் முறை யீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், தடையை விலக்கி உடனடி யாக போக்குவரத்து ஓய்வூதியர் களுக்கு பஞ்சப்படி உயர்வை வழங்க தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்நிலையில், நியாயமான தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழுவதும் போக்கு வரத்து கழக கோட்ட தலைமை அலுவலகங்கள் முன்பு ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறு கிறது. அதன் ஒருபகுதியாக, டிச.29ஆம் தேதியன்று சேலம் கோட்ட அலுவ லகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.