districts

img

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடு

ஈரோடு, ஜூன் 27- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை  வழங்கிட வேண்டும் என ஈரோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தாலுக்கா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ஈரோடு தாலுக்கா மாதர் சங்க 8 ஆவது மாநாடு சரோஜா  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பா.லலிதா  தொடக்கவுரையாற்றினார். சிபிஎம் தாலுக்கா செயலாளர்  பாலசுப்ரமணி வாழ்த்தி பேசினார். இதில், குடும்ப தலைவிக ளுக்கு அரசு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்க வேண்டும். மேல் குடிபுதூரில் பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர் வில், தலைவராக பெருமாயி, செயலாளராக கலாமணி, பொருளாளராக சரோஜா ஆகியோர் அடங்கிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இறுதியில், மாவட்ட செய லாளர் பிரசன்னா நிறைவுரையாற்றினார்.