districts

img

மயான வசதி கேட்டு வீதியில் இறங்கி போராட்டம்!

சேலம், மார்ச் 13- ஏற்காட்டில் மயான வசதி செய்து தர வேண்டும் என வலி யுறுத்தி மலைவாழ் மக்கள் வீதியில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செங்களத்துப்பாடி மலை  கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக தங்கள் கிரா மத்திற்கு மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலி யுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இக்கோரிக்கை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்காடு  காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணை யர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், எங்கள் மூதாதையர்கள் முதல் அனைவரும் செங்கலத்துப்பாடி கிரா மத்தில் பூர்வீகமாக வசித்து வருகிறோம். எங்கள் ஊர் பொது மக்களுக்கு பொது மயானம் ஒதுக்கி தரக்கோரி அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பல  விண்ணப்பங்கள் கொடுத்தும் நேரடியாக கேட்டும் தீர்வு  கிடைக்கவில்லை. இதையடுத்து வட்டாட்சியர், கோட்டாட் சியர் தலைமையில் எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து  பேச்சுவார்த்தை நடத்தி, மயானத்திற்கு 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை அரசு பெற்று தருவதாக உறுதியளித்தனர். நாங்க ளும் ஒப்புக் கொண்டோம். ஆனால், 5 வருடம் போராடியும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக் காததைக் கண்டித்து புதனன்று கிராம மக்கள் அனைவ ரும் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிவைத்து, ஊர்  மத்தியில் உள்ள வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற் காடு போலீசார் ஊர் பொதுமக்களிடம் பேச்வார்தை நடத்தி னர். அதற்கு ஊர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் தங்க ளது கிராமத்திற்கு நேரில் வந்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம், என் றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.