பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியு றுத்தி ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ஈரோடு டெலிபோன் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சின்னச்சாமி, ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கச் செயலாளர் என்.ராமசாமி, ஓய்வூதியர் சங்கப் பொருளாளர் வி.கே.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்ட னர்.