நாமக்கல், டிச.29- நாமக்கல் நகராட்சி, 14 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிக ளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். நாமக்கல் நகராட்சி, 14 ஆவது வார்டுக்குட்பட்டது கொச வம்பட்டி தேவேந்திரபுரம். இப்பகுதியில் அடிப்படை வசதி கள் செய்து தரப்படவில்லை. அப்பகுதி வார்டு உறுப்பின ரும், மக்களுக்கு உரிய பதிலை அளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால். ஆவேசமடைந்த மக்கள் நாமக் கல் - துறையூர் சாலையில் கொசவம்பட்டி நான்கு சாலை சந் திப்பில் வியாழனன்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு உள்ளிட்ட போலீசார், பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது தேவேந் திரபுரம் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.