districts

ஊத்துக்குளி ஆர்.எஸ். வழித்தடத்தைப் புறக்கணிப்பதா? தனியார் பேருந்தை வழி மறித்து இளைஞர்கள் போராட்டம்

திருப்பூர், ஜூன் 7 - ஊத்துக்குளி ஆர்.எஸ். வழித்தடத் தைப் புறக்கணித்துச் செல்லும் தனியார்  பேருந்தை வழிமறித்து இளைஞர்கள், பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட் டனர். ஊத்துக்குளி டவுன் செல்லும் பேருந் துகள், ஊத்துக்குளி ஆர்.எஸ் வழியாகச்  செல்லாமல் பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றன. பஷி ராஜா என்ற  8 ஆம் நம்பர் தனியார் பேருந்து ஊத்துக் குளி ஆர்.எஸ். செல்லாமல் பிரதான சாலை வழியாகச் சென்றது. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கொடியம்பாளையம் நால்ரோட் டில் பஷி ராஜா பேருந்தை வழிமறித்த னர். அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்து நரிடம் உரிமம் பெற்ற வழித்தடத்தில் ஊத்துக்குளி ஆர்எஸ் நிறுத்தத்திற்கும் சென்று வர வேண்டும் என்றனர்.

 இதையடுத்து இந்த பேருந்து ஊத் துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்.  வழியாக திரும்பி செல்ல வைத்தனர். ஊத்துக்குளி ஆர்.எஸ். நிறுத்தத்திற்கு வராமல் இதேபோக்கு தொடர்ந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத் தில் புகார் அளிப்பதுடன், போராட்ட மும் நடத்தப்படும் என பஷி ராஜா பேருந் தின் ஓட்டுநரை எச்சரித்தனர். பொதுவாக, திருப்பூரில் இருந்து  ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும்  தனியார் மற்றும் அரசு பேருந்துகள்  அடிக்கடி ஊத்துக்குளி ஆர்.எஸ். வழி யாகச் செல்லாமலும், திருப்பூர் முதல் செங்கப்பள்ளி வரை செல்லும் நம்பர் 11,  8, பஷிராஜா போன்ற நகர பேருந்து கள் செங்கப்பள்ளியில் இருந்து வரும் போது ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி  ஆர்.எஸ். செல்லாமல் கொடியம்பா ளையம் நால் ரோட்டில் இருந்து நேராக  கவுண்டம்பாளையம் நால்ரோடு வழி யாகச் செல்வதும் தொடர் கதையாக உள்ளது.  இந்த பேருந்துகளை மட்டுமே நம்பி  வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த காலங்களில் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் பல முறை இந்த பிரச்சனை குறித்து அதிகா ரிகளிடம் புகார் அளித்துள்ளார்கள். எனி னும் ஊத்துக்குளி வழித்தடத்தில் செல் லாமல் தவிர்க்கும் போக்கு தொடர்ந்து  கொண்டிருக்கிறது. இதே நிலை தொட ருமானால் மக்களைத் திரட்டி வலிமை யான போராட்டம் நடத்தப்படும் என்றும்  ஊத்துக்குளி தாலுகா இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் எச்சரித்துள்ள னர்.