திருப்பூர், அக்.22- மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வலி யுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் ஒப்பாரி வைத்து, தண்ணீரில் சமை யல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று அனைத்திந்திய மாதர் சங்கத் தின் மாவட்டச்செயலாளர் கு.சரஸ்வதி தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில், பெண்கள் மண் சட்டியில் எண் ணெய்க்கு பதிலாக தண்ணீர் ஊற்றி, களி மண்ணை வறுத்து நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், தக்காளி, வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியா வசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள் ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை குறிக் கும் வகையில் ஒப்பாரி வைத்தனர். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தின் தெற்கு நகரச் செயலாளர் எஸ்.பானுமதி, தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.லட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் எ.ஷகிலா உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா உட் பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மாதர் சங்கத்தினர் நடத்திய இந்த போராட்டத்தை வெகு மக்கள் பலர் சுற்றி நின்று பார்த்துச் சென்றனர்.