ஈரோடு, ஏப்.9- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயுவின் விலை உயர்வைக் கண்டித்து மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைக்கக் கோரியும், மருத்துவர்களுக்கான தகுந்த பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரியும் வெள்ளியன்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கிளைச் செய லாளர் நாராயணசாமி தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.ரகுராமன் ஆகியோர் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.