districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு நாமக்கல். ஜூலை 24- ராசிபுரம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர் செயல் பாராட்டை பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) திங்களன்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை சாத்திவிட்டு தூங்கி உள்ளனர். அதிகாலை 5மணி அளவில் கணவர் நந்தகுமார் நடைப்பயிற்சி செல்வ தற்காக வீட்டின் கதவை திறந்து வெளிய சென்றுள்ளார். இதனை கண்காணித்து ஒருவர், வீட்டின் உள்ளே புகுந்து, உறங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி சுகுணா அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துள்ளார். சுகுணா சுதாரித்து கூச்சிலிடுவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்து றையினருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சுகவனம், சம்பவம் தொடர்பாக பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அதே பகுதியை சேர்ந்த தமிழரசன்(27) என்பவர் வீடு  புகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை யடுத்து, காவல்துறையினர் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

சேலம், ஜூலை 24- சேலத்தில் செவ்வாயன்று நடைபெற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியில் பலர் கலந்து கொண் டனர். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, செவிலியர் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கியது. முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலை மையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆணும் பெண்ணும் சமம், இளம் வயது திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். இளம் வயது கர்ப்பத்தை  தடுக்க வேண்டும். குடும்ப நலத்தை பேணி காக்க வேண்டும். அளவோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாண வர்கள் சென்றனர். இந்நிகழ்ச்சியில் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், குடும்ப நல இணை இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மோடி அரசை கண்டித்து காதில் பூ சுற்றி போராட்டம்
கோவை, ஜூலை 24- தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்க ணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் காதில் பூ சுற்றி அனைத்துக் கட்சிகள் சார்பில் புத னன்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட் டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து பேரி டர் நிவாரண நிதியை ஒதுக்காமல். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல். ரயில் வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களை அறி விக்காமல். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களை யும் பாஜக ஆட்சி புறக்கணித்து இருப்பதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். திருப்பூர் அரசு ஊழியர்களை புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட் டைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு புதனன்று அரசு ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின்  மாவட்ட இணைச்செயலாளர் ராமன், வட்டத் தலைவர்  கருப்பன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலை வர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை, ஜூலை 24- உதகை - பைக்காரா சாலையில் மரம் விழுந்து  ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங் களில் பலத்த காற்று வீசு கிறது. இதனால், மாவட்ட முழுவதும், 140  மரங்கள் விழுந்ததாக மாவட்ட நிர் வாகம் தெரிவித்தது. இந் நிலையில், புதனன்று குந்தா,  உதகை, கூடலூர்  மற்றும் பந்தலூர் பகுதிகளில் காலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென் றனர். தொடர்ந்து, உதகை -  பைக்காரா சாலை சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ் சாலை மற்றும் தீயணைப் புத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மரத்தை அகற்றிய பின், ஒரு மணி  நேரத்திற்கு பின் போக்கு வரத்து சீரானது.