districts

img

அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடுக

ஈரோடு, ஜூலை 24- அரசு போக்குவரத்து கழகங் களை பாதுகாத்து, தொழிலாளர்க ளின் நியாயங்களை நிலைநிறுத்த வேண்டும் என சிஐடியு சார்பில் மக் கள் சந்திப்பு இயக்கம் நடைபெற் றது. தமிழகத்தில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பொது போக்குவ ரத்து சேவையை நம்பி உள்ளனர். குறைந்த கட்டணத்தில் நம்பகமான போக்குவரத்து சேவை வழங்குவது அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான். இவ்வாறு தமிழக மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் அரசு போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. ஏற்படும் இழப்பை அரசு ஈடு கட்டு வதில்லை. நீண்ட காலமாக அரசு எவ் வித இழப்பீடும் வழங்காததால் வங்கி களில் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தி வருகின்றன.  ஒருபுறத்தில் தொழிலாளர்களின் ஓய்வு கால சேமிப்பு பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. அரசு போக் குவரத்து கழகங்களுக்கு போதுமான  நிதி வழங்கி கழகங்களை மேம்படுத் துவதற்கு பதில் சீர்குலைக்கும் நடவ டிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. உதார ணமாக 2019 ஆம் ஆண்டு 22 ஆயி ரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்கி வந்தன. தற்போது, 19 ஆயி ரத்து 500 ஆக குறைந்துள்ளது. ஒரு  லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வந்த நிலையில், தற்ச மயம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் தொழி லாளர்கள் மட்டுமே உள்ளனர். தொழி லாளர்கள் பற்றாக்குறையால் பேருந் துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலா ளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு  அனுப்பப்படுகின்றனர். மாதம் ரூ. 100 கோடி ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தி மக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய அரசு மறைமுகமாக தனி யார் மய நடவடிக்கைகளில் ஈடுபடத்  தொடங்கியுள்ளது. ஒரு புறம் சமூக  நீதிதான் எங்கள் கொள்கை என்கிறது  அரசு. பேருந்துகள் அரசுக்குச் சொந் தம், ஆனால், அதில் பணிபுரிவது தனி யார் நிறுவன ஊழியர்கள். இது சமூக  நீதியை மறுக்கும் மோசமான நடவ டிக்கை ஆகும்.  அரசு போக்குவரத்து கழக பேருந் துகளை உபயோகப்படுத்துவது ஏழை எளிய நடுத்தர மக்கள்தான். எனவே, போக்குவரத்து கழகங் களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கான்ட்ராக்ட் தனி யார் மயம் கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு போக் குவரத்து ஊழியர்கள் சிஐடியு சார் பில் நடைபெற்ற உள்ள போராட் டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர  வேண்டும் என மக்கள் சந்திப்பு இயக் கத்தை புதனன்று (ஜூலை 24) தொடங் கியுள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், சக்தியமங்கலம் பகுதி யில் செயலாளர் கே.குமரேசன் தலை மையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கோபியில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத் திற்கு சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் டி.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர்வாகி வி.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் புதனன்று  காங்கயம் போக்குவரத்து துறை தனி யார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் காங்கயம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து பொது மக்களிடம் காங்க யம் பேருந்து நிலையம், பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் ஆகிய இடங்களில் துண்டு பிரசு ரத்தை வழங்கினர். உடுமலை மத்திய  பேருந்து நிலையத்தில் மக்கள் சந் திப்பு இயக்கத்தில், போக்குவரத்து  தொழிலாளர் சங்கத்தின் மண்டல  துணை பொதுச் செயலாளர் விஸ்வ நாதன் தலைமையில், சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர் வாகிகள் பெரியமயில்சாமி, பாபு, தியாகு, கார்த்திகேயன், முத்துராசு மற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மக் கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.