districts

img

மரவள்ளிக்கிழங்கு, பாக்கு விவசாயிகளை பாதுகாத்திடுக

சேலம், நவ 25 - விலை வீழ்ச்சியில் இருந்து மர வள்ளிக்கிழங்கு மற்றும் பாக்கு விவ சாயிகளை பாதுகாத்திட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், ஆக்கிரப்புகளை அகற்றிட வும், இலவச வீட்டுமனை பட்டா கோரி யும், டிகார்டு பட்டாவை நிரந்தமாக்கி கணினியில் பதிவேற்றம் செய்திட வும், வீட்டுமனைக் கேட்டு 807 விண் ணப்பங்கள் கொடுத்து ஆண்டுகள் சில கடந்தும் வட்டாட்சியர் நிர்வாகம்  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பதை விரைவு படுத்தி பட்டா கொடுத்திட வேண்டும். ராமநாயக்கன் பாளையம் ஊராட்சியில் ராமமூர்த்தி நகர், 10  ஏக்கர் காலணி, காமராஜ் நகர் பகுதி யில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத் திற்கு கணணி பட்டா வழங்கிட வேண் டும்.  அப்பம்மாசமுத்திரம் ஊராட்சி யில் பல்லாண்டு காலமாக பொதுப் பாதையை ஆக்கிரமிப்பை அகற்றிட  வேண்டும்.  அப்பம்மாசமுத்திரத்தில் சுமார் 18 ஏக்கர் தரிசு புறம்போக்கு நில மும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை விரைந்து அகற்றி, வீடில்லாத வர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பட்டா வழங்கிட வேண்டும். ஆத்தூர் உழவர் சந்தைப் பகுதியில்  ஆக்கிரமிப்பை அகற்றிட வேண் டும்.  மரவள்ளிக் கிழங்குக்கு என்று மில்லா விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவ சாயிகள் பெரும் பாதிப்பில் உள்ள னர். அதுபோல் பாக்கு விவசாயிக ளும் விலைவீழ்ச்சியில் பாதிக்கப் பட்டு உள்ளனர். விளைபொருள் வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது. வட்டத்தலைவர் இல.கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட பொருளா ளர் ஆர்.வெங்கடாஜலம், மாவட்ட  துணைத் தலைவர்கள்  பி.தங்க வேலு, எம்.ராமசாமி, டிஎன்டிஏ மாநிலக்குழு என்.கிருஷ்ணமூர்த்தி, வட்ட நிர்வாகிகள் வி.சுப்ரமணி, என். கலியமூர்த்தி, பி.மாணிக்கம்,  ஆர். பார்வதி உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில், திரளான விவசாயிகள்  பங்கேற்று, ஆர்ப்பாட்டத்தின் முடி வில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.