districts

img

தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க கோரிக்கை விரைவில் தீர்வு: மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் மேயர் உறுதி

திருப்பூர், மே 16- திருப்பூரில் அடிப்படை பிரச்சனை களைத் தீர்த்து வைக்கக்கோரி மாநக ராட்சி மேயரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர்  செவ்வாயன்று மனு அளித்தனர். போர்க் கால அடிப்படையில் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று மேயர் ந.தினேஷ் குமார் உறுதி அளித்தார். திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர்  வழங்குவது, பழுதடைந்த சாலைகளை  சீரமைப்பது, தெரு விளக்குகள் அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று தர்ணா போராட்டம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவ லகத்தில் மேயர் தினேஷ்குமாரை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறி யதாவது, கோடை காலம் தொடங்கி யது முதல் திருப்பூரில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனைகள், நான்காம் குடி நீர் திட்டம் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு  வருகிறது. ஏவிபி லேஅவுட், மகாலட்சுமி  நகர், ஸ்ரீநகர், அவிநாசி கவுண்டம்பாளை யம்  ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர்  பிரச்சனைகள் மற்றும் தெரு விளக்கு  பிரச்சனைகள் போர்க்கால அடிப்படை யில் உடனடியாக தீர்க்கப்படும் என்று கூறினார். மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட  சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து  நிலையம் பி.என்.சாலையில் மழைக் காலங்களில் கழிவு நீர் செல்வது சரி  செய்யப்படும். பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம்  தொடங்கப்படும். மேலும், பல இடங்க ளில் சாலைகள் சீரமைக்கும் பணிகள்  தொடங்கப்படும். செப்டம்பர் இறுதிக் குள் பணிகள் முழுமை அடையும் என்று  உறுதி அளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் என.கோபால், ஏ.சந்தோஷ், கிளைச் செயலாளர்கள் ராஜாமணி, சங்கர், ராஜேஷ், பாண்டி யன், காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசாமி,  கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் சுப்பிரமணி உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.