districts

img

ஏற்காட்டிற்கு தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை

சேலம், பிப்.14- ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் வன அலுவலர், ஆத்தூர் வன அலுவலர், தீயணைப்புத்துறை, காவல் துறை  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியார்களிடம் ஆட்சியர் செ.கார்மேகம் கூறுகையில், மாவட்டத்தில் 28 சதவிகிதம் வனப்பகுதி உள்ளது. கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில், காட்டுத்தீ முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வனத்துறை, தீயணைப்புத்துறை, கிராம பஞ்சாயத்து, வருவாய்த்துறை இணைந்து ஆலோ சிக்கப்பட்டது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த எளிதில் தீப் பற்றும் பொருட்களை ஏற்காடு எடுத்து செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது, என்றார்.

மேலும், தீத்தடுப்பு குறித்து வனப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக் கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைக்கிராமங்களில் குப்பைகளை எரிக்கக்கூடாது. சுற்றுலா பயணிகள் கேம்ப்  பயர், மலைப்பாதையில் மது அருந்துதல், புகைப்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வனவிலங்கு கள் தண்ணீர் அருந்துவதற்கு வசதியாக ஏற்காட்டில் 70க்கும்  மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. அனுமதி பெற்று சில்வர் லூக் மரங்கள் வெட்டப் படுகிறது. இது கடத்தல் ஆகாது. வனத்துறை கட்டுப்பாட் டிலுள்ள மரத்தை வெட்டினால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் செல்லும்போது, கட்டாயம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்  செல்லக்கூடாது. அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் செ.கார்மேகம் எச்ச ரிக்கை விடுத்தார்.