districts

கேரளாவில் இருந்து உதகைக்கு கோழி, முட்டை கொண்டு வரத் தடை

உதகை, ஏப்.23- பறவைக்காய்ச்சல் பரவல் காரண மாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழி, முட்டை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். இந்நிலையில் கேரளாவை  ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையி லும் வாகன சோதனை தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து  வரும் வாகனங்கள் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுகிறது.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட  ஆட்சியர் மு.அருணா கூறியிருப்பதா வது, நீலகிரி மாவட்ட எல்லை மாநில மான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட் டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற் பட்டுள்ளதை தொடர்ந்து, நீலகிரி  மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய்  பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட் டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழி யினங்கள், முட்டைகள் மற்றும் கோழி  தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வரு வதை தீவிர கண்காணிப்பு செய்யப்ப டுகிறது. கக்கனல்லா, நம்பியார் குன்னு,  தாளூர், சோலாடி, கக்குண்டி, பூல குன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல்  ஆகிய 8 சோதனை தடுப்புச் சாவடியில்  தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இங்கு ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய் வாளர் மற்றும் ஒரு கால்நடை பராம ரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்து றையுடன் இணைந்து பறவைக்காய்ச் சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல்  இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். மேலும் பண்ணை உபகரணங்களை மாதம்  இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத் தம் செய்ய வேண்டும். கோழி பண்ணை யில் அசாதாரண இறப்புகள் இருந் தால் உடனடியாக அருகில் உள்ள கால் நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் நாம் சமைக்கும் கோழிக்கறி மற்றும் முட்டை  உண்பதால் இந்நோய் பரவாது. பற வைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல் லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.  சுகாதார முன்னெச்சரிக்கை நடவ டிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல்  தடுக்க முடியும். மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.