districts

img

மாணவர்களுக்கு நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம், ஜூன் 16- கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக கல்வி பயின்று வரும் மாணவர்கள் முழுமையான கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று தனியார் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதாக கூறி 10க்கும் மேற்பட்ட மாணவர் கள், வாலிபர் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.  கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளி யும் 25 சதவிகித இடத்தினை ஏழை மாணவர்களுக்கு இலவச மாக வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. இந் நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையில் செயல்பட்டு வரும்  பிரபல தனியார் (ஸ்ரீ வித்யா மந்திர்) பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் கட்டணமில்லாமல் படித்து வருகின்றனர். இதற்கான நிதியை  ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகின்றது. கடந்த ஆண்டு முதல் இந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கப்படாத நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் படித்து வரும் மாணவர்கள் நடப்பாண்டு பள்ளிக்குச் செல்லும் போது முழு  கட்டணத்தையும் செலுத்தியாக வேண்டும் என்று பள்ளி நிர்வா கம் தெரிவித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே இந்த திட்டத்தில் படிப்பதால் முழு கல்வி கட்டணத்தையும் செலுத்த முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் பள்ளிக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கட்ட ணம் செலுத்தாத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.  இதனை அடுத்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், வாலி பர் சங்கத்தினருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியரிடமும், கல்வித் துறை அதிகாரிகளிடமும் இப்பிரச்சனை குறித்து கோரிக்கை  மனு வழங்கினர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.