districts

img

உள்ளாட்சிகளில் தனியார் ஒப்பந்தம்: ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா

திருப்பூர், பிப்.16- நகராட்சி, மாநகராட்சிகளில் தனியார் ஒப் பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங் களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வியாழ னன்று திருப்பூரில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. நகராட்சி, மாநகராட்சி தனியார் மையமா கும் அரசாணை எண் 152 மற்றும் 10 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 152ல் ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி யிடம் வழங்க வேண்டும். அரசாணை 10ல் புறக்கணிக்கப்பட்ட ஓட்டுநர் பணியிடங்க ளைச் சேர்க்க வேண்டும், உதவி திட்ட அமைப் பாளர் மற்றும் புள்ளிவிவர குறிப்பாளர் பணி யிடங்கள் நீடித்து தர வேண்டும். மக்கள் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப் படையில் பணியமர்த்தும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவ லர் சங்கம் மாநில செயலாளர் எம். சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில், மாநில செயலாளர் பி.சுந்தர ராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி. ஆனந்த் துவக்கி பேசினார். சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் எ.ராணி, செயலாளர்  எம்.பாலசுப்பிரமணி யம் ஆகியோர் கோரிக்கைகளை குறித்து பேசினர்.  இதில், நகராட்சி, மாநகராட்சி அலுவ லக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியா ளர் சங்க மாநில பொருளாளர் எம்.ஜெகநா தன், தமிழ்நாடு நகராட்சி ஓட்டுநர்கள் மற்றும் துலக்குனர் சங்கம் மண்டல தலைவர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு நகராட்சி மாநக ராட்சி அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் கே. எஸ்.பிரகாஷ், மாவட்ட துணை தலைவர் எ. சாதிக் அலி உள்ளிட்டோர் வாழ்த்தி உரை யாற்றினர். முடிவில், தமிழ்நாடு நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு ஊழியர் சங்க மாநி லத் தலைவர் எஸ்.வேல்முருகன் நன்றி கூறி னார்.