மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி ஏறிகிட்டேதான் இருக்கு. குறைஞ்சபாடு இல்லை. மோடி ஆட்சி போனதான் எல்லோ ருக்கும் விடிவுகாலம் என்கிறார்கள் இவர்கள்….
இந்திரா
நான் செக்கிங் வேலை செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு குழந் தைங்க. அதனால கம்பெனிக்கு எல்லாம் போக முடியாது. வீட்டி லேயே கொண்டு வந்து பீஸ் போடுவாங்க. அதை செக் பண்ணி குடுப்போம். வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு, குழந்தைகளை தூங்க வச்சுட்டு வேலை செஞ்சா ஒரு நாளைக்கு 150 ல இருந்து ஒரு 200 பீஸ் பார்ப்போம். ஒரு வாரத்துக்கு ஆயிரம் ரூபா, 1500 ரூபாய் கிடைக்கும். இப்பல்லாம் கம்பெனி ஷிப்ட்டுக்கே வேலை இல்லன்னு எங்களுக்கு பீஸ் கொண்டு வந்து தர்ரதில்லை. குழந்தைகளுக்கு பீஸ் கட்டனும். கடன் கட்டனும். இதுல சமைகிற கேஸ் விலை கண்ணாபின்னானு ஏறி இருக்கு. இப் படியே போச்சுனா என்ன பன்றது.
செல்வராணி
நான் சிங்கர் டெய்லரா வேலை செஞ்சிட்டு இருந் தேன். உடம்புக்கு முடியாம் போயிருச்சு. அதுனால இப்போ ஒரு அலுவலகத்தில உதவியாளரா வேலை செய்யுறேன். சிலிண்டர் விலையில் இருந்து சீரகம், கடுகு விலை வரை எல்லாமே ஏறி கிடக்குது. கடைக்கு ஆயிரம் ரூபாய் கொண்டு போனலும் வீட்டுக்கு தேவையானத வாங்க முடியலை. யார்ட்டப் போய் கேக்குறதுன்னு தெரியல. மோடி ஆட்சிக்கு வந்ததுல இருந்து விலைவாசி ஏறிட்டேதான் இருக்கே தவிர குறைஞ்ச பாடு இல்லை என்றார்.
சந்திர குமார்:
நான் பிஇ,. முடிச்சு 3 வருசம் ஆயிருச்சு. எல்க்ட்ரிசி யனா வேலை செஞ்சுட்டு இருக்கேன். எதுமே படிக்காம வேலை கத்துகிட்டவங்களுக்கும், எனக்கும் ஒரே கூலி தான். ரூ4 லட்சம் செலவு பண்ணி படிச்சும் ஒன்னு பிரயோ ஜனம் இல்லை. அதுனால ஒரு லட்சம் கட்டி ஜாவா கோர்ஸ் முடிச்சு இண்டர்வியுக்கு போன 4 வேக்கண்டுக்கு 300 பேர் இண்டெர்வியு அட்டன் பண்றாங்க. எனக்கு வேலை கிடைக்கும்ற நம்பிக்கையே போயிருச்சு. எதோ இப்ப ஒரு அண் ணன் ரெபர்ரல ஜாவா டெவலப்பர் அசிஸ்டண்டா வேலை கிடைச்சுருக்கு. 3 மாசத்துக்கு சம்பளமே இல்லாம வேலை செய்யனுமாம். வீட்டில், மூனு மாசத்துக்கு சம்பளம் கிடைகாதுன்னு சொல்லிருக்கேன். வேற வழியில் லாம இப்ப அந்த வேலைக்குப்போக போறேன். தினமும் திருப்பூரிலி ருந்து கோவைக்கு போய்ட்டு வர செலவு, சாப்பாடு செலவு எல்லாத்தை யும் நான்தான் ரெடி பண்ணனும். இதுதான் நிலைமை.
-லிவின்