districts

img

நீலகிரி பழங்குடியின பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருது

உதகை, மார்ச் 9- சர்வதேச மகளிர் தினமான செவ் வாயன்று, நீலகிரி பழங்குடியின 2 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருதினை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். ஒன்றிய அரசின் பெண்கள் மற் றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் பல்வேறு துறை களில் சிறப்பாக செயல்படும் பெண் களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பெண் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) வழங்கப்படு கிறது. தொழில் முனைவு, வேளாண்மை, சமூகப்பணி, கல்வி,  இலக்கியம், மொழியியல், கலை கள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், மாற்றுத்திற னாளிகள் உரிமைகள், வனவிலங்கு கள் பாதுகாப்பு என பல்வேறு துறை களை சேர்ந்த பெண்கள் இவ்விரு துக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்

3 தமிழக பெண்களுக்கு விருது

இந்நிலையில், 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கும் விழா, சர்வதேச மகளிர்  தினமான செவ்வாயன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற் றது. இதில் நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருது களை குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் வழங்கினார். இதில்  தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்களுக் கும் பெண் சக்தி விருது வழங்கப் பட்டது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினை  கலைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. மேலும்,  மனநல மருத்துவரும், ஆராய்ச்சி யாளருமான தாரா ரங்கசாமிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. பழங்குடி யின பெண்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவரும், பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பி ராய்டரி கொண்ட சால்வைகள் மற் றும் ஆடைகளை உருவாக்கி வரு வது குறிப்பிடத்தக்கது.