கோவை, ஜூன் 24- தமிழ்நாடு அரசு பொதுச் சுகா தார துறை மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில், கலைஞரின் சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப் பிணிகளுக்கு விலையில்லா பரிசு பெட்டகத்தை கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வழங்கினார். கோவை, கணுவாய் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளியில், தமிழ் நாடு அரசு பொதுச் சுகாதார துறை மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் கலைஞரின் சிறப்பு மருத் துவ முகாம் சனியன்று நடை பெற்றது. இந்த முகாமை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்து, பார்வை யிட்டார். இதையடுத்து, முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங் கப்படும் விலையில்லா பரிசுப் பெட்டகத்தை பி.ஆர்.நடராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், பன்னிமடை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் மருதாச்சலம், சோமையம் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்த குமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சி பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், சிஐடியு வடக்கு பொதுத் தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் கேசவமணி, சிஐடியு இன்ஜினி யரிங் சங்க பொதுச் செயலாளர் சி. துரைசாமி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கலைஞர் நூற் றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒருங்கி ணைந்த மருத்துவ முகாம் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக் கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற இம்மருத்துவ முகாம் களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.