சேலம், டிச. 4- சேலத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை பாலர் சங்கத்தினர் புத்தகங்களை பார்வையிட்டு, வாசித்து மகிழ்ந்தனர். சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா கடந்த 20ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. இதில், தமிழக கலாச்சாரம், பண்பாடு, உலகத் தலைவர்கள் வரலாறுகள், தமிழ்-ஆங்கில இலக்கண நூல்கள் மற்றும் சிறுகதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் பாலர் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழாவை சென்று பார்வையிட்டு புத்தகங்களை வாசித்தும், மகிழ்ந் தனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் வடக்கு மாநகர பாலர் சங்க நிர்வாகிகள் கே.ஜோதிலட்சுமி, எம்.கற்பகம், ஜோசப், மனோகர், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.