தருமபுரி, டிச.28- மின்சார வாரிய தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் தருமபுரி மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று நடைபெற்றது. மின்சார வாரிய பணியாளர் களுக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை .100-ன்படி மின்வாரிய பணியாளர்கள், ஓய்வூ தியர்கள் ஆகியோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேற் கொள்ள வேண்டிய முத்தரப்பு ஒப் பந்தத்தை அமலாக்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். கேங்மேன் பணியாளர் களுக்கான விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்க வேண்டும். பிரிவு அலுவலகங்கள், உப கோட்டங்கள், நிர்வாக பிரிவுகள் உள்ளிட்டவைகளை மறு சீரமைப்பு என்ற பெயரால் தொழிற்சங்கங் களோடு கலந்து பேசாமல் ஒப் பந்தத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கையை கைவிட வேண்டு மென வலியுறுத்தி 2023ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று நடை பெறும் வேலைநிறுத்திற்கான ஆயத்தக் கூட்டம் தருமபுரி மேற் பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சிஐடியு தமிழ் நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் தி. லெனின் மகேந்திரன், பொருளாளர் சீனிவாசன், தமிழ்நாடு மின்வாரிய எலக்ட்ரிக்சிட்டி எம்பிளாயிஸ் பெட ரேசன் மாநில இணைச் செய லாளர் எஸ்.கோகுல்தாஸ், தமிழ் நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் மாநில தலைவர் சி.முருகன், டாக்டர் அம்பேத்கர் எம்பிளாயீஸ் பெட ரேசன் திட்ட துணைச்செயலாளர் வினோத் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுநடவடிக்கை குழு நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.