சேலம், ஜூன் 15- மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி தம்பி மீது நடவ டிக்கை எடுக்க கோரி நிறைமாத கர்ப்பிணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கோனேரிப் பட்டி பகுதியை சேர்ந்த சத்யா அவரது தாய் சோலையம்மாள். இவரது அண்ணன் சதீஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கோனேரிப் பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிர் சுய உதவி குழுவில் நாங்கள் இருந்து வந்தோம். கடந்த ஆண்டு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு எங்கள் குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வந்தது. இந்நிலையில், எங்கள் குழுவில் இருந்து சோபியா மேரி என்ற பெண் விலகி னார். இதனால் குழுவில் பிரச்சனை ஏற்பட் டது. இது குறித்து கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் தம்பியுமான பந்தா குமாரிடம் கேட்ட போது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும், எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தற்போது வந்துள்ள மகளிர் சுய உதவி குழு கடன் 10 லட்சம் ரூபாயை எங்களுக்கு பிரித்து தராமல் எங்களை குழுவில் இருந்து நீக்கி விட்டு அவர்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரை அந்த குழுவில் இணைத்துள்ளனர். எங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்றினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு நீதி வேண்டி ஆட்சியர் அலு வலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தனர்.