districts

img

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரதாப் நியமனம்

கோவை, மே 30-  கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்த ராஜகோபால் சுன் கரா, சென்னை குடிநீா் வடிகால் வாரியத்துக்கு மாற் றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகளை பணியிட மாற் றம் செய்து, தமிழக தலை மைச் செயலர் வெ.இறை யன்பு ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்தார். இதில்,  கோவை மாநகராட்சி ஆணையராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முதல் பணியாற்றி வந்த ராஜகோபால் சுன்கரா ஐ.ஏ.எஸ், சென்னை  குடிநீர் வடிகால்வாரிய செயல் இயக்குநராக பணி யிடம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தற் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவ லர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு  வகித்து வரும் பிரதாப் நிய மிக்கப்பட்டுள்ளார்.  புதிய மாநகராட்சி ஆணையர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர்.