கோவை, ஜன.3- கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் நிதியிலிருந்து 74.30 லட்சம் மதிப் பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங் களை புதனன்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கோவை மாவட்டம், சங்கனூர் ஆரம்பப்பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்று சுவர், இச் சிப்பட்டி காலனியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டி டம், ரங்கநாதபுரம் ஆரம்ப பள்ளி யில் 2.30 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் நீளம் தாண்டுதல் தளம், வீரகேர ளம் ஆனந்தா நகர் பகுதியில் 21 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், வடவள்ளி மகாராணி அவன்யூ பகுதியில் 15 லட்சம் ரூ பாய் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் ஆகிய திட்டங்களுக்கு நாடாளு மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலை யில், திட்ட பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட் டுக்கு எம்.பி., பி.ஆர்.நடராஜன் திறந்துவைத்தார். முன்னதாக, இந்நிகழ்வில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கானது மட்டும் அல்ல. இந்த தேசத்தின் அனைத்து பகுதி மக்களின் தேவை என்பதை கவனத்தில் கொண்டு பொது விநி யோகத் திட்டம் பாதுக்காக்கபட வேண்டும். நான் லேபர் கமிட்டி உறுப்பினராக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற் காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றி ருந்தேன். அங்கு குடிசைத் தொழி லாக வளையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியபோது, குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைத்தால் தான் 120 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆந்திராவில் எளிய மக்களின் நிலை இப்படி இருக்க, அங்குள்ள ரேஷன் கடை களில் அரிசி ஒரு கிலோ 9 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப் பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரிசி விலை இல்லாமல் வழங்கபடுவ தில்லை. கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கபடாமல் இருந்தால் ஏழை எளிய மக்கள் மிக வும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பார் கள். எனவே, பொது விநியோக திட் டத்தை காப்பது மிகவும் அவசிய மாகும். உணவு அனைவருக்கும் கட்டாயம் தேவை அதே போல் கல் வியும் அவசியம் என சொல்லும் அரசு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசை பாதுகாப் பது நமது கடமை என்றார். இந்த நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற் றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.