districts

img

கல்விப்பயணம் தடையின்றி தொடர தாராளம் கட்ட வேண்டும்!

கோவை, ஆக. 23- சமூகநீதிக்காக தொடர்ந்து இயங்கும் மாநிலம் என்பதால், மாணவர்களின் கல்வி  கற்கும் ஆர்வம் அதிகரித்து வருவது இயல் பானது. இவர்களின் கல்விப்பயணம் தங்கு  தடையின்றி தொடர் தராளமாக கல்விக்கடன் களை வங்கிகள் வழங்க வேண்டும் என வங்கிகள் ஆய்வுக்கூட்டத்தில் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலி யுறுத்தினார். கோவை மாவட்ட வங்கிகள் ஆய்வுக்கூட் டம் புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் ,  திமுக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மற்றும் பொதுத்துறை வங்கிகளின் உயர திகாரிகள், மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் வங்கிகள் செயல்பாடுகள் பற்றி ஆய்வு நடத் தப்பட்டது. பல்வேறு வங்கி கடன் திட்டங் கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசுகையில், கல்வியாண்டு துவங் கியுள்ளதால், கல்விக் கடன் தருவதில் வங்கி கள் முன்னுரிமை தர வேண்டும். சமுக நீதிக் காக தொடர்ந்து இயங்கி வரும் மாநிலம் என்ற முறையில் உயர்கல்விக்கு வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. அவர்கள் கல்விப் பயணம் தடையின்றி தொடர வங்கிகள் உதவ வேண் டும். சமீபத்தில் பொள்ளாச்சி  பகுதிகளில் கல்விக்கடன் முகாம் நடைபெற்று உள்ளது.  அதில் விண்ணப்பித்துள்ள மாணவ மாணவி யருக்கு கல்வி கடன் வழங்குவதில் தாமதம் இன்றி வங்கிகள் செயல்பட வேண்டும். அடுத்து கோவை மாநகரப் பகுதியில் கல்விக் கடன் முகாம் நடைபெற ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது. அதற்கும் வங்கிகள் தயா ராக வேண்டும். கல்வி கடன்களுக்கு விண்ணப் பிக்கும் மாணவ மாணவியருக்கு உதவும்  வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியாக சிறப்பு வட்டாட்சியர் ஒருவரை நிய மிக்க நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட நிர்வா கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட கால கோரிக்கையாக உள்ள கோவை கரும்புக்கடை பகுதியில் ஒரு  வங்கி கிளை துவக்க வேண்டும் என்பதை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.