பள்ளிபாளையம், பிப்.1- குமாரபாளையத்தில் 75 சதவி கித கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இந்த தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னிலை போடப்பட்டது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் முன்பு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத் தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படை யில் 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர்கள் புதனன்று கால வரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தை துவக்கினர். இதில், 20 ஆயி ரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தில் முடங்கியுள் ளது. முன்னதாக, தொழிலாளர்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, உட னடியாக வட்டாட்சியர் முத்தரப்பை யும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடி யுசி, ஏஐசிசிடியு, எல்யுசி உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத் தொழில் சங் கத்தினர் பங்கேற்றனர். குமாரபா ளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஏஐசிசிடியு சுப்ரமணி தலைமை தாங்கினார். இதில், சிஐ டியு சங்க நிர்வாகிகள் கே.மோகன், வெங்கடேசன், சரவணன் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் உரையாற்றி னர். இதில், ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். இதனைத்தொடர்ந்து பேரணி யாக வந்த விசைத்தறி தொழிலா ளர்கள் சங்கத்தினர் குமாரபாளை யம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.