நாமக்கல், நவ.9- நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோ கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக் கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால், அருகிலுள்ள குறுகிய பாதையின் வழியாகவே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால், அந்த குறுகிய சாலையில் மழை நீர், சாக்கடை நீர் உள்ளிட்டவை அடிக்கடி தேங்கி, பழுதா கின்றன. மேலும் வாகனங்கள் ஒழுங்குப்ப டுத்தி செல்வதற்கு போதிய இடவசதியும் இல் லாததால், அவசர தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனமும் நெரிச லில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதேநேரம், விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே போர்க்கால அடிப்படையில் வாகன நெரிசலை சரி செய்திட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், சாக்கடை களை தூர்வாரி பள்ளிப்பாளையத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.