districts

img

கூடுதலாக 6,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு

மேட்டுப்பாளையம், ஜூலை 11- வரும் ஐந்தாண்டுகளில் கூடுத லாக 6 ஆயிரத்து 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு  நிர்ணயித்து பணிகள் நடைபெற்று வருகிறது என மேட்டுப்பாளையத் தில் தமிழக மின்சாரத்துறை அமைச் சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள் ளார். ஜூலை 14 ஆம் தேதியன்று மாலை கோவை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 ஆம் தேதி நடை பெறும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்சி களில் பங்கேற்று விட்டு ஜூலை 16  தேதி மதியம் சென்னை திரும்பு கிறார். இதற்கிடையே திமுக தலை வரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் கோவை வருகையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பு நிகழ்சிகள் குறித்து ஆலோசிக்க திங்களன்று மேட்டுப் பாளையத்தில் திமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய் தியாளர்களிடம் கூறுகையில், “அதி முக ஆட்சி காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது என கூறி யவர்கள், மின் இணைப்பு கோரி காத் திருந்த நான்கரை லட்சம் விவசாயி களுக்கு மின்சாரம் வழங்காமல் இழுத்தடித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் மொத்தமாக 18 ஆயிரம் பேருக்கு மட்டுமே மின் இணைப்பு கள் கொடுக்கப்பட்டன. ஆனால்,  திமுக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில்  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு  வழங்கப்படும். வரும் ஐந்தாண்டு களில் கூடுதலாக 6 ஆயிரத்து 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணி யாற்றி வருகிறோம்” என்றார். மேலும், அதிமுகவில் நடை பெற்று வரும் மோதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மற்றொரு கட்சியில் நடைபெறும் உட்கட்சி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என்றும், கோவை வருகை தரும் முதல்வருக்கு பிர மாண்ட வரவேற்பு கொடுக்கப்படும், என்றார்.