districts

img

20 சதவிகித போனஸ் வழங்குக

நாமக்கல், அக்.22- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சத விகித போனஸ் வழங்க வலியுறுத்தி விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் ஞாயிறன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்த விசைத்தறி தொழிலாளர் களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  பள்ளிபாளையத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இந்த இயக்கத்தில் நாமக்கல் மாவட்ட  விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், ஒன்றியச்   செயலாளர் எஸ்.முத்துக்குமார், பள்ளி பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு 20 சத விகித போனஸ் கோரிக்கையை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  இக்கோரிக்கையை வலியுறுத்தி பல் வேறு போராட்டங்கள் அடுத்தடுத்து நடத்த உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர்.