districts

img

சுப்பராயன் மக்கள் பணி நூல்: பிரகாஷ் காரத் வெளியிட்டார்

திருப்பூர், ஏப்.9- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூ ரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கே.சுப்பரயான் ஐந்தாண்டு கால மக்கள் பணி நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.  திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந் திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்ப ராயனை ஆதரித்து திங்களன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரம்மான்ட மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பரயானின் ஐந்தாண்டு கால மக்கள் பணிகள் நூலை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வெளியிட, திமுக திருப்பூர் தெற்கு மாநகரச் செயலா ளர் டி.கே.டி. மு.நாகராஜ் பெற்றுக் கொண் டார். இந்நிகழ்வில், திருப்பூர் மாநகர மேயர், திமுக வடக்கு மாநகரச் செயலாளர் ந. தினேஷ்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற் குழு உறுப்பினர் எம்.ரவி, மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமயந்தி  கந்தசாமி, கொமதேக மாவட்டத் தலைவர் கே. சுரேஷ்குமார், விசிக நிர்வாகி துரை வளவன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் நசுருதீன், திராவிடர் கழக மாவட் டச் செயலாளர் யாழ் ஆறுச்சாமி, திராவிட விடுதலைக் கழகத் தலைவர் முகில் ராசு, மனிதநேய ஜனநாயக கட்சி ராஜா முகமது உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு முன்பாக திருப்பூர் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ் சுந்தரம் நன்றி கூறினார்.