கோவை, ஜன.25- நிர்ணயித்த கூலியை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் இயக்கத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட் டத்திலுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்களுக்கு, ஜவுளி உற்பத்தி யாளர்கள் வழங்க வேண்டிய கூலி உயர்வை வழங்கக்கோரி கடந்த ஒன்பதாம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று விசைத்தறி உரிமை யாளர்களின் குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில், உடனடியாக கூலி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடிதம் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவை அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோமனூர் பகுதி தலைவர் பழனிச்சாமி தலைமையில் அப்பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பினர்.