ஈரோடு, ஏப்.21- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அஞ்சல் ஓய்வூ தியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடு பட்டனர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். கமுடேசன் பிடித்தம் 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஜூன் 30 இல் ஓய்வு பெற்ற வர்களுக்கு நேஷனல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. உடனடியாக இச்சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட் டத்தில் முன்வைக்கப்பட்டது. ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற தர்ணா விற்கு, ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.சின்னசாமி மற்றும் சகோதர சங்கங்களின் நிர் வாகிகள் உரையாற்றினர். முடிவில், வருமான வரித்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.காவேரி நன்றி கூறினார்.
நாமக்கல்
அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் அஞ்சலக கண் காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத் தின் தலைவர் எஸ்.மணியாரன் தலைமை ஏற்றார். செயலாளர் ராம சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், சங்க பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டஓய்வூ தியர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு, ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கி ணைப்பு குழு சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பழனி தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் பி.ரவிச் சந்திரன், மாநில துணைத்தலைவர் கே.ஆர்.கணேசன் மற்றும் சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.
கோவை
கோவை மாவட்ட தலைமை தொலைபேசி நிலையத்தின் வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வரி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் கருணாநிதி, இதில், ராஜசேகரன், அரங்கநாதன், என்.பி.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.