திருப்பூர், ஆக. 22 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் கணபதி ஹோமம் வளர்த்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள் ளது. பொங்கலூர் தேவனாம்பாளையம் சாலையில் மாணவர் விடுதி பழைய கட் டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டி டத்தைப் புதுப்பித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டுள் ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா திங் களன்று நடைபெற்றது. கல்வித்துறை சார்ந்த இந்த அலுவ லகத்தின் திறப்பு விழாவில், கட்டிடத் தின் மையத்தில் கணபதி ஹோமம் வளர்த்து, அய்யர்களை வரவழைத்து மந்திரம் ஓதி பூஜை செய்துள்ளனர். இந்த நிகழ்வில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர் கள் கலந்து கொண்டனர். அத்துடன் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலை வர் குமார் உள்பட மக்கள் பிரதிநிதிக ளும் கலந்து கொண்டனர். அரசு சார்ந்த நிகழ்வுகள், அரசுக் கட் டிடங்கள் திறப்பு விழா போன்றவற்றில் எந்தவொரு மதம் சார்ந்த சடங்கு, சம்பி ரதாயங்கள் மேற்கொள்ளாமல் மதச் சார்பற்ற முறையில் நடத்த வேண்டும் என்பது அரசியல் சட்டப்படியான நடை முறை ஆகும்.
ஆனால் அதற்கு நேர் மாறாக, பூஜை புணஸ்காரங்களுடன் கல்வித்துறை அலுவலகம் திறக் கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு நேர் எதி ரான நடவடிக்கை ஆகும். அத்துடன் கல்வித்துறையில் வேலை செய்யக்கூடிய அலுவலர்கள், ஆசிரியர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இருக்கின்றனர். வெவ் வேறு நம்பிக்கை சார்ந்தவர்கள் வந்தி ருந்த நிலையில், இது போல் பூஜை நடத் தியது அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி யது. குறிப்பாக கல்வி என்பது அறிவை வளர்த்து, மூட நம்பிக்கைகளைத் தகர்க் கக்கூடிய முக்கியமான கருவியாக உள் ளது. அந்த கல்விக்காக இயங்கக்கூடிய அலுவலகத்தில் சடங்கு, சம்பிரதாயப் படி ஹோமம் வளர்த்தது கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாகவும் இருந்தது. பகுத்தறிவு, அறிவியல் மனப் பான்மையை ஊட்டி வளர்க்க வேண்டிய கல்வித்துறையினர், ஆசிரியர்கள் இது போல் செய்தது எந்த விதத்திலும் நியா யப்படுத்த முடியாதது என்று ஒரு பகுதி ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். மதச்சார்பின்மை, பகுத்தறிவு, அறி வியல் மனப்பான்மை ஆகியவற்றுக்கு எதிராக பொங்கலூர் உதவித் தொடக் கக்கல்வி அலுவலகத்தில் ஹோமம், பூஜை நடத்தக் காரணமாக இருந்த வர்கள் மீது விசாரணை நடத்தி மாநில பள்ளிக்கல்வித் துறையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் சட்டப் படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.