districts

img

பொங்கல்: பரிசல் போட்டி

பள்ளிபாளையம், ஜன.16 - பொங்கல் திருநாளையொட்டி பள்ளிபாளையத்தில், பரி சல் போட்டிகள் நடைபெற்றது.   நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம். ஜனதா நகர் பகுதி யில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, காவேரி தாய் மீனவ நண்பர்கள் சார்பில், முதலாம் ஆண்டு பரிசல் போட்டி நடை பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்ட பரி சல்களில், மீனவர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஈரோடு காவிரி கரை முனியப்பன் கோவில் அருகில் இருந்து துவங்கிய பரிசல் போட்டி, ஆவரங்காடு காவிரிக்கரை ஜனதா நகர் பகுதி யில் நிறைவு பெற்றது. பரிசல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து நபர் களுக்கு பரிசு கோப்பை மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.