பள்ளிபாளையம், ஜன.5- பள்ளிபாளையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் பெறு வதற்காக குவிந்த மக்களால் அரசு ஊழி யர்கள் தடுமாறினர். தமிழ்நாடு முழுவதும் தைப்பொங் கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர் களுக்கு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற் றும் ரூ.1000 ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள் ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் செவ்வாயன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு டோக்கன் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த பகுதி யில் உள்ள ரேசன் கடை ஊழியர் களைக் கொண்டு வீடு, வீடாக கொடுக் கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் படி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள ஆவரங்காடு பகுதி யில், 5 ரேசன் கடைகள் செயல்பட்டு வரு கிறது. மொத்தமாக 5 ஆயிரத்து 147 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், ஆவரங்காடு பகுதி யில் உள்ள வீடுகளுக்கு ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை புதனன்று கொடுக்க சென்றனர். மற்றொரு பகு திகளில் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்கள், எங்கே தங்களுக்கு பரிசு தொகுப்பு டோக்கன் கிடைக்காமல் போய் விடுமே என ரேசன் கடை ஊழியர்களை முற்றுகையிட்டு, டோக்கனை பெற குவிந்ததால், ரேசன் கடை ஊழியர்கள் உரிய அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க முடியாமல் தடுமாறினர். சிறிது நேரத்திற்கு பிறகு ரேசன் கடை ஊழி யர்கள் பொதுமக்களை சமரசப்படுத்தி, அனைவருக்கும் கட்டாயம் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படும் என அமைதிப்படுத்தினர். இதன்பின் வரிசை யில் நின்று டோக்கன்களை பொது மக்கள் பெற்றுச்சென்றனர்.