districts

img

திருப்பூர் நொய்யல் கரையில் பொங்கல் திருவிழா

திருப்பூர், ஜன.16- திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஞாயிறன்று துவங்கிய சமத்துவ பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண் பாட்டு கழகம் மற்றும் ஜீவநதி நொய்யல் சங் கம் சார்பில், திருப்பூரில் மூன்று நாள் சமத் துவ பொங்கல் திருவிழா, யுனிவர்சல் தியேட் டர் அருகே நொய்யல் நதிக்கரையில் ஞாயி றன்று துவங்கியது. இந்நிகழ்வில், புதுப்பானைகளில்  30 பெண்கள் பொங்கல் வைத்து அனைவருக் கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து நிமிர்வு கலை குழுவின் பறை இசை யுடன் மேடை நிகழ்ச்சிகள் துவங்கின. அழகு  வள்ளி குழுவினரின், வள்ளி கும்மி ஆட்டம்,  திருப்பூர் மண்ணிசை கலைஞர்களின் நாட்டுப் புற பாடல், களரி, சிலம்பாட்டம், பெருஞ் சலங்கை ஆட்டம், திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் பெண்கள் தப்பாட்டம். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை பெரிய மேளம் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், புலம்பெயர் தமிழர் நல வாரிய தலை வர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை மேயர் பால சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துகண்னன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ்,  ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மாநக ராட்சி மண்டல குழு தலைவர்கள் கோவிந்த சாமி, கோவிந்தராஜ், ‘நிட்மா’ மற்றும் ஜீவ நதி நொய்யல் சங்க தலைவர் ரத்தினசாமி மற் றும் நிலைக்குழு தலைவர்கள் பங்கேற்ற னர். முன்னதாக, ‘திறன்மிகு திருப்பூர்’ செல்பி  பாயின்டை மேயர் திறந்து வைத்தார். இது நம்ம ஊரு திருவிழா என்கிற உணர்வோடு, திருப்பூர் பகுதி மக்கள் குடும்பம் குடும்ப மாக ஆயிரக்கணக்கானோர், மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற னர்.  நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலை வர் மு. ஜீவானந்தம், செயலாளர் ஆர். ஈஸ் வரன், மோகன் கார்த்திக், பி.ஆர்.கணேசன், மு.திருப்பதி, ஆர்.குமார் உள்பட விழா ஏற் பாட்டாளர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாள் நிகழ்வு திங்கட்கிழமை மாலை நொய்யல் கரை விழா மேடையில் நடைபெற்றது. கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், கர்நாடக மலையக மக் களின் டோல்லு குனிதா உள்ளிட்ட பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதிலும் பெரும் திரளான மக்கள் பங்கேற்ற னர். தமிழக மக்களின் உழைப்பை போற்றும் பண்பாட்டு திருவிழாவான இந்த பொங்கல் விழாவின் மூன்றாம் நாளான இன்று நொய் யல் கரையில் 3 ஆயிரம் பேர் பங்கேற்று பொங் கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.