உடுமலை, ஏப்.9- மலை அடிவார பகுதியில் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் வகை யில், அனைத்து பகுதிகளிலும் சோலார் மின் வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வாக்குறு தியளித்தார். இந்தியா கூட்டணியின், பொள் ளாச்சி நாடாளுமன்ற திமுக வேட்பா ளர் கே.ஈஸ்வரசாமி உடுமலை ஒன்றி யத்தின் மருள்பட்டி, மலையாண்டிபட் டணம், ஆண்டியகவுண்டனூர், பெரி சனம்பட்டி, கிலுவன்காட்டூர், தும்பலப் பட்டி, எலையமுத்தூர் மற்றும் கல்லா புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வாக்காளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, உடு மலை ஊராட்சி பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவு படுத்தபடும். ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் திருமூர்த்தி அணை யில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். மலை அடிவார பகுதி யில் காட்டு விலங்குகளை கட்டுப்படுத் தும் வகையில் சோலார் மின் வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இப்பிரச்சாரத்தின் போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் அனிதா செல்வ ராஜ், திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், மார்க்சிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ், விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் பால தண்டபாணி மற்றும் இந்திய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.