districts

img

பொள்ளாச்சி: காந்தி சிலை அமைப்பு நகராட்சி தலைவர் ஆய்வு

பொள்ளாச்சி, மே 10- பொள்ளாச்சி புதுரோட்டில் அகற்றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் நிறுவுவது குறித்து நகரமன்ற தலை வர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதுரோட்டில் 1985 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத் துறையினரால் இரு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், மீண்டும் காந்தி சிலையை நிறுவுவது குறித்து திங்களன்று பொள்ளாச்சி நகராட்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காந்தி சிலை  மீண்டும் நிறுவப்பட்டு பொதுமக்கள் மரியாதை செலுத்தும் விதமாக அழகிய வடிவில் சிலையின் சுற்றுப்புறம் அமைக் கப்படுமெனவும், புதுரோடு பெயர் மாற்றப்பட்டு காந்தி சாலை என மாற்றம் செய்யப்பட உள்ளதாக சியாமளா நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கு.சன்முகசுந்தரம், திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.வரதராஜன், நாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கன்னிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.