districts

தேர்தல் பணிமனைக்கு அலுவலகம் தேடும் அரசியல் கட்சியினர்

தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் வகையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணி மனை அமைக்க வாடகைக்கு அலுவலகம் பிடிக்கும் பணிகள் ஜோராக நடைபெற்று வரு கிறது.  நாடாளுமன்ற தேர்தல் தேதி வரும் நாட் களில் எப்போது வேண்டுமானாலும் அறிவிக் கப்படலாம் என்கிற நிலை உள்ளது. இப் போதே தேர்தல் குறித்த பரபரப்பு மக்கள் மத்தி யில் வரத்துவங்கியுள்ளது. அரசியல் கட்சி இயக்கங்கள், தேர்தல் சின்னங்களை வரை வது, பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில் முனைப்போடு பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில், திமுக, அதிமுக, காங்கி ரஸ், இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, நாம்  தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி கள் தேர்தல் தயாரிப்பு பணிகளில் தீவிரம்  காட்டி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் வலுவாக  ஒரு அணியிலும், கூட்டணிக்கு அரசியல் கட்சி களை எதிர்பார்த்து அதிமுக, பாஜக என இரு  அணிகளும் தவித்து வருகிறது.

இதுஒருபுறமிருக்க தேர்தல் காலத்தில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வாட கைக்கு தனி அலுவலகம் பிடித்து தேர்தல் பணிமனை அமைத்து, அங்கிருந்து வேலைகளை செய்வது வழக்கம். இந்நிலை யில், ஓரு சில நாட்களில் தேர்தல் தேதி அறி விக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந் துள்ள நிலையில், உள்ளூர் மட்டத்தில் செயல் படும் அரசியல் கட்சியினர் அலுவலகங் களை வாடகைக்கு எடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.  இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த  பிரமுகர்கள் கூறுகையில், எதிர்வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என அனைத்து கட்சிகளுமே தேர்தல் களப்பணியாற்றுவார்கள். இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காக தேர் தல் பணிமனைகள் அமைப்பது வழக்கமான  ஒன்று. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னமே பணிகள் செய்வதற்கு ஏதுவான இடத்தை தேர்வு செய்து பணிகளை முன் னமே துவங்கும் வகையில் ஏற்பாடுகள்  செய்து வருகிறோம். பொதுவாக வெளியிடங் களில் அரசியல் கட்சிகளுக்கு வாட கைக்கு அலுவலகம் கொடுப்பதற்கு கட்டிட  உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேசி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டியது வரும். தேர்தல் தேதி அறிவித்த  பிறகு போட்டி அலுவலகத்தை பிடிப்பதில் போட்டி அதிகமாக இருக்கும்.

இதனை மன தில் வைத்து கட்டட உரிமையாளர்களும் வாட கையை பல மடங்கு உயர்த்துவார்கள். ஆகவே இப்போதே இப்பணிகளை முடித்து விட்டால், மற்ற வேலைகளில் கவனம் செலுத் தலாம் என்பதற்காக இப்போதே தேர்தல் பணி மனைக்கான அலுவலகங்களை தேடி வருவ தாக தெரிவித்தனர். பிரதான கட்சிகளாக இருக்கக்கூ டிய பெரிய கட்சிகள், இதற்கு முன்னே  தேர்தல் பணிமனை அமைத்த இடங்களை யும், அல்லது அதைக் காட்டிலும், கூடுதல் வச திகளோடு உள்ள இடத்தையும் தேர்வு செய் யும் பணியில் இப்போதிலிருந்து ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.   நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறி விக்கப்பட உள்ளதை ஒட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், டீக்கடைகளிலும், பொது இடங்களிலும் அரசியல் பேச்சுகள், கட் சிகளின் கூட்டணி கணக்குகள் குறித்து பரவ லான பேச்சுகள் விவாதங்கள் பொதுமக்கள் துவக்கியுள்ளனர். அரசியல் கட்சிகளும் தேர் தல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  தேர்தல் திருவிழா எதிர்பார்ப்பு இப் போதே துவங்கி விட்டது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் அக்கறை ஒன்றிய ஆட்சியா ளர்களுக்கு இல்லை என்பது வெளிப்படை. அத்தகைய ஆட்சியை தூக்கி எரிய வாக்கு  என்கிற ஆயுதத்தோடு மக்கள், இளம் தலை முறையினர் ஆர்வமாக காத்திருப்பது ‘புதிய  தலைமுறை”களுக்கு தெரிய வாய்ப் பில்லை. - பிரபாகரன்