districts

img

சிபிஎம் கொடி மரத்தை அகற்றிய காவல்துறை: போலிசாரி்ன் எதிர்ப்பையும் மீறி  அதே இடத்தில் மீண்டும்  கொடி மரத்தை நட்டனர்

கோவை, மே 3-  கோவையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்ப த்தை காவல்துறை அராஜகமாக அகற்றி யது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் காவல்துறையினரின் எதிர்ப்பை யும் மீறி அதே பகுதியில் மீண்டும் கொடிக்கம்பத்தை அமைத்தனர். கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருந்தது. மே தினம், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வு களில் கட்சியின் மூத்த தலைவர் கே. ரமணி உள்ளிட்ட முக்கிய தலை வர்கள் இக்கம்பத்தில் செங்கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்றுவதற்காக கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடிக் கம்பத்தை தயார் செய்ய சென்றுள்ள னர். அப்போது, அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலை மையிலான போலீசார், கொடிக்கம்ப த்தை அகற்றுமாறு அங்கிருந்த கட்சி ஆதரவாளர்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து தற்காலிகமாக கொடிக் கம்பத்தை அகற்றிய ஊழியர்கள் கட்சி யின் தலைமைக்கு தகவல் தெரிவித்த னர்.

இதனையடுத்து காவல் ஆய்வா ளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள் ளனர். இதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்ததால், ஆவேசமடைந்த கட்சி ஊழியர்கள் செவ்வாயன்று காலை  அதே பகுதியில் மீண்டும் கொடி மரத்தை நடுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழு உறுப்பினர் அஜய் குமார், கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ், நகரக்குழு உறுப்பினர் நாகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் திரண்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் லதா கட்சியின ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  40 ஆண்டுகளாக இருந்த கொடிக் கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரி வித்த தலைவர்கள்  மீண்டும் இங்கேயே நடுவோம்; முடிந்தால் கைது செய்யுங் கள் என்றனர். பின்னர் ஆவேச முழக்கங் களை எழுப்பி கொடிமரத்தை அங்கேயே நட்டனர். இதனையடுத்து என்ன செய்வது என முழித்த காவல் துறையினர், அங்கிருந்த குடியிருப்பு வாசிகளிடம் கொடிமரம் இடையூறாக இருக்கிறது என புகார் கொடுங்கள் என அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியும், கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதனை அப்பகுதி மக்கள் அலட்சியப்படுத்தி விட்டுச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.