திருப்பூர், அக்.30 - கோவை சிலிண்டர் வெடிப்பு குற் றவாளியுடன் தொலைபேசியில் பேசி யதாக கூறப்படும் நபரிடம் என்.ஐ.ஏ உத்தரவின் பேரில் திருப்பூர் மாந கர காவல் துறையினர் விசாரணை செய்தனர். திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதியில் வசித்து வரும் அப்துல் ரசாக் (32) என்ற இளைஞரை கடந்த 2017ம் ஆண்டு என்.ஐ.ஏ. விசாரித்து விடுவித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் என்.ஐ.ஏவின் உத்தரவின் கீழ் திருப்பூர் மாநகர போலீசார், வீட் டில் இருந்த அப்துல் ரசாகை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்து ஆட்களை சேர்க்கும் பணி யில் ஈடுபடுகிறார்களா? என்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 2017ஆம் ஆண்டு தீவிர கண்கா ணிப்பு நடத்தினர். இந்த நிலையில் ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களுடன் தமிழகம் மற் றும் கேரளாவை சேர்ந்த சிலர் தொடர் பில் இருந்து வந்தது தேசிய புல னாய்வு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கோவை யில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் முகாமிட்டு 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இவர் களுடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தியதில் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதி யைச் சேர்ந்த அப்துல் ரசாக் (30) என்பவரிடம் விசாரணை மேற் கொண்டனர். பனியன் தொழிலாளி யான இவர் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான முகநூலுடன் தொடர் பில் இருந்ததாக கூறி அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அப்துல் ரசாக்கை என்.ஐ.ஏ கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனிடையே கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையை துவக்கி உள்ள சூழ லில், சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந் தது. இந்நிலையில், கோவை சம்பவத் தில் தொடர்புடைய ஒருவரிடம் அப் துல் ரசாக் போனில் பேசியதாக தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் அப்துல் ரசாக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ, திருப்பூர் மாநகர போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாந கர போலீசார் அப்துல் ரசாக்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். விசாரணை அறிக்கை என்.ஐ.ஏ. விடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவ டிக்கை குறித்து என்.ஐ. ஏ தான் முடிவு செய்யும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.